Posts

Showing posts from December 13, 2012
புதிதாக நியமனம் ஆசிரியராக பெற்ற இடைநிலை/ பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் 14-12-2012 வெள்ளிக்கிழமையோஅல்லது 17.12.2012 அன்றோ பணியிடங்களில் பணியமர உத்தரவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   புதிய இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியராக பணியிடங்களை பெற்ற 18000 ஆசிரியர்களும் தங்கள் பணிநியமன ஆணைகளை வரும் 13ஆம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடைபெறும் விழாவில் பெற்றுக்கொண்டு 14ஆம் தேதி வெள்ளிக்கிழமையோ அல்லது 17.12.2012 அன்றோ தங்கள் பணியிடங்களில் பணிகளில் அமர உத்தரவிடப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றரை ஆண்டுகளில் 28 ஆயிரம் பேர் தேர்வு : டி.ஆர்.பி., பெருமிதம் "ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.  அதன் அறிக்கை: கடந்த ஆண்டு, மே முதல்,நடப்பு ஆண்டு டிசம்பர் வரை, 10 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 28,414 பேர், தேர்வு செய்யப்பட்டனர்.  இவ்வாறு, டி.ஆர்.பி.,தெரிவித்துள்ளது. தேர்வுகளும், தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் வருமாறு: தேர்வு தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை   1. இடைநிலை ஆசிரியர் 9,689  2. சிறப்பு ஆசிரியர் 1,555  3. பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் 13,074  4. கம்ப்யூட்டர் ஆசிரியர் 192  5. சத்துணவு பணியாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் 136  6. முதுகலை ஆசிரியர் 3,438  7. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் 34  8. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் 151  9. பாலிடெக்னிக் கல்லூரி - உ