Posts

Showing posts from May 5, 2022
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு, பூந்தமலையில் உள்ள ஆர்.சி.எம் சிறுபான்மை பள்ளியில் பள்ளி உதவியாசிரியராக (B.T Assistant - Maths) மனுதாரர் பணியமர்த்தப்பட்டார். நியமனம் செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் அவருக்கு அளிக்கப்பட்டுளளது. இதற்கிடையே, இப்பள்ளி கடந்த 2016ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. பள்ளி நிர்வாகம், மனிதாரரை மீண்டும் உதவியாசிரியராக நியமித்தது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளார். உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் அனுமதியுடன் 2013 முதல் 2016 வரை ஊதிய உயர்வும் மனுதாரர் வாங்கியுள்ளார். மேலும், 2016ம் ஆண்டு தனது இரண்டாவது குழந்தை பிறக்கும
Image
 +2 பொதுத்தேர்வு... 32,000 பேர் ஆப்சன்ட்... அதிர்ச்சி! தமிழகம் முழுவதும் இன்று (05/05/2022) தொடங்கியுள்ள 12- ஆம் வகுப்பு தேர்வுகள் வரும் மே 28- ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த தேர்வுகளை 8,37,317 மாணவ, மாணவிகள் எழுதுகின்றன. இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மொழிப்பாட தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த 8,37,317 மாணவ, மாணவியர்களில் 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.