Posts

Showing posts from October 5, 2022
Image
  பகுதிநேர விரிவுரையாளர்களை பணியமர்த்த வேண்டாம்: கல்வி ஆணையர் உத்தரவு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலங்களில் காலியாக உள்ள விரிவுரையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால். கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து பகுதிநேர விரிவுரையாளர்கள் மற்றும் முழுநேர தொகுப்பூதிய விரிவுரையளார்களை பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைப் பணியமர்த்தி கொள்ள அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது, இந்நிலையில், 27.11.2019 அன்று விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஜுலை மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து, உத்தேச தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து பகுதிநேர விரிவுரையாளர
Image
  BVSc & AH: கால்நடை மருத்துவம், பி.டெக். படிப்புகளுக்குக் குறைந்த வரவேற்பு; விண்ணப்பங்கள் சரிவு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புகளில் சேர இந்த ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்துள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளை அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் வழங்கி வருகின்றன. இதன்கீழ் மொத்தம் 580 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகள் மொத்தம் 5.5 ஆண்டுகள் (4.5 ஆண்டுகள் + 1 வருட உள்ளிருப்பு பயிற்சி) காலம் கொண்டவை. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை - 120 இடங்கள்  கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் - 100 இடங்கள் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 100 இடங்கள் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 100 இடங்கள் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தலைவாசல் கூட்டுரோடு, சேலம் - 80 இடங்கள் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வீரபாண்டி தேனி- 4
Image
  TNPSC Group 2 Cut Off: கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது? டிஎன்.பி.எஸ்.சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும்? எத்தனை வினாக்களுக்கு சரியாக விடையளித்தவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகலாம் என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 முதல் நிலைத் தேர்வு கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்றது. 5529 பதவிகளுக்கு நடந்த இந்த தேர்வை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர். சுமார் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. இதனிடையே, குரூப் 2 முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத் தேர்வுக்கு, ஒரு பதவிக்கு 10 பேர் (1:10) என்ற வீதத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடைசி கட் ஆஃப் மதிப்பெண்களில் தேவைக்கு அதிகமானோர் இருந்தாலும், அத்தனை பேரும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பதவியில் கடைசி ஒரு இடத்திற்கு 10 பேர் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில், அதே கட் ஆஃப் மதிப்பெண்ணை 100 பேர் பெற்றிருந்தால், 100 பேரும் முதன்மைத் தேர்வுக்கு தகுதி செய்யப்
Image
  அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு தனியாக ஆள் சேர்ப்பு! வேலைக்கே வராமல் சம்பளம் பெற்ற அரசு ஊழியர்கள்! அரசு பள்ளியில் ஆசிரியர் பணிக்கு தனியாக ஆள் சேர்ப்பு! வேலைக்கே வராமல் சம்பளம் பெற்ற அரசு ஊழியர்கள்! வாரத்தில் ஒரு நாளில் அனைத்து நாட்களுக்கும் வருகை பதிவேட்டில் கையெழுத்து! தலைமை ஆசிரியருடன் கூட்டு சேர்ந்து சதி! கோவை மாவட்டத்தை அடுத்த பேரூர் பகுதியில் உள்ள ஆலந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் கணித ஆசிரியை ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாரம் ஒருமுறை வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு வேலைக்கு வராமல் சம்பளம் பெற்று வந்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது. ஒன்றரை வருடங்களாக அவரது கணித பாடத்தை மாணவர்களுக்கு நடத்துவதற்காக தலைமை ஆசிரியை ஒப்புதலோடு ஒரு பட்டதாரி ஆசிரியையை குறைந்த சம்பளத்தில் எடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆசிரியை வாரம் ஒரு முறை பள்ளிக்கு வந்து அனைத்து நாட்களுக்கும் பணிக்கு வந்ததாக அரசின் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு உள்ளார். இவ்வாறு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்க தலைமை ஆசிரியை கடிதம் கொடுத்து வந்துள்ளார். அதே பள்ளியில் மற்றொரு ஆ
Image
  தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 09.10.2022) அன்பார்ந்ந தனியார் பள்ளி தாளாளர்களுக்கும், முதல்வர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கினைப்பாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கம்...   வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (09/10/2022) திருப்பத்தூர் ST. MARY'S MATRIC. HR. SEC பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். விருப்பமுள்ள,அனுபவமுள்ள,அனுபவமற்ற மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....    BE, ME, B. TECH, M. TECH, IT, Ph.D, MPHIL, M. ED, B. ED, BSc, MSc, BA, MA, B. LIT, M. LIT, B. COM & M. COM  போன்ற அனைத்து பட்டதாரிகளும் ( without B. ED) கலந்து கொள்ளலாம்....  தனியார் பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு  முன்பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...      நேர்முகத்தேர்வு நடைபெறும் ம