Posts

Showing posts from September 11, 2014
விரைவில் வருகிறது கணினி பயிற்றுநர் Notification. GO MS NO : 130 -DATED 05/09/2104 விரைவில்வருகிறதுகணினிபயிற்றுநர்Notification.கணினிபயிற்றுநர்நியமனத்தற்கானஅரசானைவெளியிடப்பட்டுள்ளது.அதன்நகல்கிடைத்தபின்உடன்இத்தளம்முலம்வெளியடப்படு்ம்.அரசானைஎண்GO MS NO : 130 DATED 05/09/2104.நன்றி Sorce From : Computer Science B.Ed Graduates Association, Aruppukottai,
ஆசிரியர் பணி நியமனம்: தகுதிகாண் முறையை ரத்து செய்ய கருணாநிதி மீண்டும் வலியுறுத்தல் ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தினார். இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோரில் சுமார் 62 ஆயிரம் பேர் உரிய மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றும்கூட, தகுதிகாண் மதிப்பெண் காரணமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் தகுதிகாண் முறையை ரத்துச் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளன. எனவே தகுதிகாண் மதிப்பெண் முறையை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும் தபாலில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு "ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்து, பழைய முறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் குண்டு வெடிக்கும்' என, மர்ம நபர் எழுதிய கடிதம், கொல்லிமலை அரசு பள்ளி தலைமையாசிரியருக்கு வந்துள்ளது. இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாட்டில், அரசு பழங்குடியினர் உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, சுற்று வட்டாரத்தை சேர்ந்த மலைவாழ் இனத்தை சேர்ந்த, 515க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமையாசிரியராக, கலைவாணி உள்ளார். நேற்று முன்தினம் மதியம், 2 மணிக்கு போஸ்ட்மேன், ஸ்டாம்ப் ஒட்டாத தபால் ஒன்றை, பள்ளி தலைமையாசிரியர் கலைவாணியிடம் கொடுத்துச் சென்றார். அந்த கவரை பிரித்து படித்த அவர், கடும் அதிர்ச்சி அடைந்தார். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வை (டிஇடி) ரத்து செய்து விட்டு, பழைய முறையை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், பள்ளி கட்டிடம், ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதிகள், சேந்தமங்கலம் தொகுதி அனைத்து கட்சி, எம்.எல்.ஏ.