.jpg)
எந்த அறிவிப்பும் இல்லாமல் முடிந்த சட்டப்பேரவை... தீவிர போராட்டத்திற்கு ஆயத்தமாகும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் தொடரில் எவ்விதமான அறிவிப்பும் வெளியாகாததை அடுத்து தீவிர போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 11.11.2011 அன்று தமிழக அரசு பிறப்பித்த ஆணை 177-ன் படி வேலைவாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்பட்ட இவர்களுக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றும், இதற்காக இவர்களுக்கு மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஊதியம் இல்லாத மே மாதம் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்து ...