Posts

Showing posts from April 18, 2025
Image
  முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது: முதல்வரிடம் மனு கொடுக்க உரிமை இல்லையா? எனக் குமுறல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர முடியும் என்ற உத்தரவு உள்ளதால், 2012, 2013, 2017 மற்றும், 2019-ம் ஆண்டுகளில், ஆசிரியர் தேர்வாணையத்தின் வாயிலாக, டெட் என்ற தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. பின், அதில் தேர்ச்சி பெற்றோர் அதிகரித்ததால், 2023 அக்டோபர் 25-ம் தேதி நியமன தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதில், 40,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடந்த, 2024 மே மாதம் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, ஜூலையில், 2,800 பேர் அடங்கிய உத்தேச தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. இருப்பினும், இதுவரை கலந்தாய்வோ, பணி நியமன ஆணைகளோ வழங்கப்படவில்லை. இதனால் விரக்திஅடைந்த, பட்டதாரி ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க சென்றனர். காலிப் பணியிடங்களை தேர்வெழுதிய ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும், பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. ஸ்டாலினை சந்திக்க சென்ற 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர்,...
Image
  தமிழ்நாட்டில் 1.55 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப முடிவு .. எந்த துறையில் எவ்வளவு பணியிடங்கள்? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 24 ஆயிரத்து 599 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 8,616 பணியிடங்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 4,329 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 19 ஆயிரத்து 472 பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளதாக அமைச்சர் கயல்விழி கூறினார். விரைவில் 1.55 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறினார். எந்தெந்த துறையில் எவ்வளவு பணியிடங்கள் நிரப்படும் என்பதை பார்ப்போம். தமிழகத்தில் பலருக்கும் அரசு பணியில் சேர வேண்டும் என்கிற கனவு உள்ளது. அவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் 1.55 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு நேற்று பதில் அளித்து துறையின் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசிய போது இந்த தகவலை தெரிவித்தார். அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், "ஐ.ஏ.எஸ்...
Image
  தமிழகத்தில் 1,55,992 அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை... அமைச்சர் தகவல்! தமிழகத்தில் 1,55,992 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பதிலளித்து பேசும்போது, டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் மூலமாகவும் கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவும் மொத்தம் 1 லட்சத்து 55,992 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்: ஈரோடு மாவட்டம், பவானி சாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையம் வழங்கும் பயிற்சித் திட்டங்களை பதிவு செய்யப்பட்ட காணொலிகள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அந்த நிறுவனத்திற்கென CSTI சேனல் என்ற பெயரில் ஒரு புதிய "காணாெலி பகிர்வுதளம்" (Video Sharing Platform) தொடங்கப்படும். இது அந்த நிறுவனத்தில் நடத்தப்படும் விரிவுரைகள், வகுப்புகள் ஆகியவற்றின் நி...