Posts

Showing posts from May 19, 2023
Image
  பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர வேண்டுமா? விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குவதாக அறிவிப்பு! பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியான நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இவர்களில் மாணவர்கள் 4,55,017, மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு நாளை தொடங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி : முதலாமாண்டு பட்டய படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச
Image
  கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் 22ம் தேதி வரை நீட்டிப்பு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்- அமைச்சர் பொன்முடி
Image
  பிளஸ் 1 தேர்வு முடிவு: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்! தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 19) பிற்பகல் வெளியாகின. இதில் 90.93 சதவிகிதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 94.36% பேரும், மாணவர்கள் 86.99% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 7.37% மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 1: பாடவாரியாக தேர்ச்சி விகிதம் இயற்பியல் 95.37% வேதியியல் 96.74% உயிரியல் 96.62% கணிதம் 96.01% தாரவவியல் 95.30% விலங்கியல் 95.27% கணினி அறிவியல் 99.25% வணிகவியல் 94.33% கணக்குப்பதிவியல் 94%
Image
11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : 90.94% பேர் தேர்ச்சி..! தமிழகத்தில் 11 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது.தமிழகத்தில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா முடிவுகளை வெளியிட்டார் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், கடந்த ஆண்டு 90.07% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தேர்ச்சி விகிதம் 0.86% அதிகரித்துள்ளது.
Image
  10th Result 2023 Villupuram: விழுப்புரம் மாவட்டம் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன தெரியுமா ? விழுப்புரம் மாவட்டம் 90.57 சதவீதம் தேர்ச்சி ஆகும். விழுப்புரம் மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 12,451 மாணவர்கள், 12,232 மாணவிகள் என 24,683 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 10,886 மாணவர்கள், 11,470 மாணவிகள் என மொத்தம் 22,365 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.43 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.77 ஆகும். விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.57% ஆகும்.  அரசு பள்ளிகளை பொறுத்தவரை 230 பள்ளிகளைச் சேர்ந்த 7,871 மாணவர்கள், 8526 மாணவிகள் தேர்வு எழுதி நிலையில், மாணவர்கள் 6619 பேரும், மாணவிகள் 7874 பேரும் மொத்தம் 14,493 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.39 ஆக உள்ளது.
Image
 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியா? கவலை வேண்டாம்.. துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தேர்வு எழுதிய 9,14,320 மாணவர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவியர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 6.50 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் அறிந்துக்கொள்ளலாம். அதேபோல் தேர்வு முடிவுகள் செல்போன் எண்ணுக்கு SMS வாயிலாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 பேர் தேர்ச்சி பெற தவறியுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்களுக்கு துணைத் தேர்வு ஜுன் மாதத்தில் நடத்தப்படும்.மே 23 ஆம் தேதி முதல் 27-ம் தேதி வரை பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
Image
  10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்... 91.39% பாஸ்... மாணவர்களை விட மாணவிகளே அதிகம்...! 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வாயிலாக அறிந்துகொள்ளலாம். தமிழ்நாட்டில் 91.39 சதவிகிதம் பேர் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 (94.66%) பேரும், மாணவர்கள் 4,04,904 (88.16%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவியர் 6.50% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் 90.07% ஆக இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது. கூடுதல் விவரங்கள் மொத்தமுள்ள 12,638 பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 3,718 ஆகும். 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும். பள்ளிகளின் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம் 1 அரசுப் பள்ளிகள் - 87.45% 2. அரசு உதவிப் பெறும் பள்ளிகள் - 92.24% 3. தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 97.38% 4. இருபாலர் பள்ளிகளில் பயின்றோர் - 91.58% 5. பெண்கள் பள்ளிகள் - 94.38% 6 ஆண்கள்
Image
  TN Results 2023 : இன்று ரிசல்ட்! 10, 11ம் வகுப்பு மாணவர்களே! தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் லிங்குகள் உள்ளே! மாநிலம் முழுவதும் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் ஆங்கில பாடத்தில் தவறாக கேட்கப்பட்ட 3 மதிப்பெண், ஒரு 2 மதிப்பெண் கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், பின்னர் 19ம் தேதி வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இந்நிலையில் மே 19ம் தேதி இன்றே 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும்,