Posts

Showing posts from April 8, 2023
Image
  பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணித பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் - தேர்வு துறை அறிவிப்பு பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி, கடந்த 03ம் தேதி நிறைவு பெற்றது. பொதுத்தேர்வின் கடைசி நாளில், பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி அடுத்த மாதம் மே மாதம் 5-ந் தேதி வெளியிடப்படவுள்ளன.   இந்த நிலையில், கணித தேர்வில் வெளியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் விடை அளிக்க சிரமப்பட்டனர். இதனையடுத்து அந்த கேள்விக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட
Image
  குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை- டிஎன்பிஎஸ்சி விளக்கம் குரூப் 4 தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 10 ஆயிரத்து 117 காலி பணியிடங்களில் தட்டச்சர் பிரிவில் மட்டும் 2 ஆயிரத்து 500 காலிப்பணியடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு 450 பேர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ச்சி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிக அளவில் தேர்வாகியுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் தேர்வைகள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. சங்கரன்கோவில் பகுதியில் 450 பேர் தேர்ச்சி பெற்றதால் முறைகேடு என சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவிய நிலையில் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெறவில்லை. ஒரு குறிப்பிட்ட தேர்வுக்கான பயிற்சி வழங்குவதில் குறிப்பிட்ட பகுதி என்பது