17 January 2014
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனி தேர்வு.
நடப்பு கல்வி ஆண்டில் (2013-2014) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தனியாக தேர்வு நடத்த
ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்ப கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்துத்தேர்வை நடத்தியது.
இந்த காலியிடங்கள் 2012-13-ம் கல்வி ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள் ஆகும்.இந்த தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் (தமிழ் நீங்கலாக) நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக தமிழ் பாடத்துக்கான தேர்வு முடிவு மட்டும் வெளியிடப்படவில்லை. பின்னர் வழக்கு முடிவுக்கு வந்ததை அடுத்து டிசம்பர் 23-ம் தேதி தமிழ் தேர்வு முடிவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.முதலில் தேர்வு முடிவு வெளியான பாடங்களுக்கும் பின்னர் வெளியிடப்பட்ட தமிழ் பாடத்துக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்ட தற்காலிக இறுதி தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுவிட்டது. இதற்கிடையே, 2013-14-ம் கல்வி ஆண்டுக்கான 981 நேரடி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கியது.எனவே, இந்த 981 காலியிடங்களும் தற்போது நடத்தப்பட்ட தேர்வு முடிவு மூலம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான காலியிடங்களுக்கு அனுமதி பெறப்படுவதற்கு முன்பாகவே 2881 காலியிடங்களை நிரப்புவதற்கான பணிநியமன பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதால் தற்போதைய தேர்வு மூலமாக981 காலியிடங்களை நிரப்ப முடியாது என்றும் இதற்கு தனியாக தேர்வு நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேற்கண்ட 981 காலிப் பணியிடங்களில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் 809 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய காலியிடங்கள் ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புத் துறை ஆகியவற்றின் கீழ் செயல்படும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள காலி யிடங்களாக இருக்கக்கூடும்.
16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் வேலை அம்போ? அரசு மவுனத்தால் ஆசிரியர்கள் பீதி-Dinamalar
மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ், வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், பீதி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசும், மவுனமாக இருப்பது, ஆசிரியர்களை, மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.
தொகுப்பூதியம்:இரு ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர், அரசு பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். வாரத்திற்கு மூன்று அரை நாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில், இவர்கள், பணியாற்றி வருகின்றனர். அரசு வேலை, என்றாவது ஒரு நாள், பணி நிரந்தரமாகிவிடும் என்ற எண்ணத்தில், அதிக சம்பளத்தில் இருந்தவர்களும், அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர வேலைக்கு வந்தனர்.
மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்ட நிதியின் கீழ், இவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தற்போதைய திட்டம், முடிவுக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வேலை பறிபோகலாம் என்ற செய்தி கசிவதால், 16 ஆயிரம் பேரும், கலக்கம் அடைந்துள்ளனர். முகம் சுளிக்காமல்:இந்த விவகாரத்தில், புதிதாக வரும் மத்திய அரசு கை விரித்தாலும், தமிழக அரசு, தாங்கள், பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில், தமிழக அரசு, மவுனம் காப்பதால், ஆசிரியர் மத்தியில், பீதி அதிகரித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்க பொதுச்செயலர், கோவிந்தராஜு கூறியதாவது: வாரத்திற்கு, மூன்று அரை நாள் வேலை என்பது, கடித அளவில் தான் இருக்கிறது. முழு நேரமும், வேலை செய்கிறோம். தலைமை ஆசிரியர் தரும் அனைத்து வேலைகளையும், முகம் சுளிக்காமல் செய்கிறோம்.
நம்பிக்கையுடன்:அரசு பணி என்பதால், மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் வந்தோம். ஆனால், தொடர்ந்து வேலை செய்வோமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது. 'மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலையில் தொடர, வாய்ப்பு இல்லை' என, கூறுகின்றனர்.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகளும், வாய் திறக்க மறுக்கின்றனர். நாங்கள், தொடர்ந்து பணியாற்ற, தமிழக அரசு, வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பிரச்னையை, அமைச்சர் முதல், அதிகாரிகள் வரை, பலருக்கும் எடுத்துக்கூறி உள்ளோம். அதிக வயதை கடந்த நிலையில், குடும்பம், பிள்ளைகள் என்ற சூழலில் வசிக்கும் எங்களுக்கு, இந்த நேரத்தில், வேலையில் பிரச்னை ஏற்பட்டால், அதை தாங்கிக்கொள்ள முடியாது.
மத்திய அரசு திட்டம் கைவிடப்பட்டாலும், நாங்கள் தொடர்ந்து பணியாற்றவும், பகுதிநேர வேலையை, முழுநேர வேலையாக மாற்றவும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கோவிந்தராஜு கூறினார்.
மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ், வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், பீதி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசும், மவுனமாக இருப்பது, ஆசிரியர்களை, மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.
தொகுப்பூதியம்:இரு ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர், அரசு பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். வாரத்திற்கு மூன்று அரை நாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில், இவர்கள், பணியாற்றி வருகின்றனர். அரசு வேலை, என்றாவது ஒரு நாள், பணி நிரந்தரமாகிவிடும் என்ற எண்ணத்தில், அதிக சம்பளத்தில் இருந்தவர்களும், அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர வேலைக்கு வந்தனர்.
மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்ட நிதியின் கீழ், இவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தற்போதைய திட்டம், முடிவுக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வேலை பறிபோகலாம் என்ற செய்தி கசிவதால், 16 ஆயிரம் பேரும், கலக்கம் அடைந்துள்ளனர். முகம் சுளிக்காமல்:இந்த விவகாரத்தில், புதிதாக வரும் மத்திய அரசு கை விரித்தாலும், தமிழக அரசு, தாங்கள், பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில், தமிழக அரசு, மவுனம் காப்பதால், ஆசிரியர் மத்தியில், பீதி அதிகரித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்க பொதுச்செயலர், கோவிந்தராஜு கூறியதாவது: வாரத்திற்கு, மூன்று அரை நாள் வேலை என்பது, கடித அளவில் தான் இருக்கிறது. முழு நேரமும், வேலை செய்கிறோம். தலைமை ஆசிரியர் தரும் அனைத்து வேலைகளையும், முகம் சுளிக்காமல் செய்கிறோம்.
நம்பிக்கையுடன்:அரசு பணி என்பதால், மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் வந்தோம். ஆனால், தொடர்ந்து வேலை செய்வோமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது. 'மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலையில் தொடர, வாய்ப்பு இல்லை' என, கூறுகின்றனர்.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகளும், வாய் திறக்க மறுக்கின்றனர். நாங்கள், தொடர்ந்து பணியாற்ற, தமிழக அரசு, வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பிரச்னையை, அமைச்சர் முதல், அதிகாரிகள் வரை, பலருக்கும் எடுத்துக்கூறி உள்ளோம். அதிக வயதை கடந்த நிலையில், குடும்பம், பிள்ளைகள் என்ற சூழலில் வசிக்கும் எங்களுக்கு, இந்த நேரத்தில், வேலையில் பிரச்னை ஏற்பட்டால், அதை தாங்கிக்கொள்ள முடியாது.
மத்திய அரசு திட்டம் கைவிடப்பட்டாலும், நாங்கள் தொடர்ந்து பணியாற்றவும், பகுதிநேர வேலையை, முழுநேர வேலையாக மாற்றவும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கோவிந்தராஜு கூறினார்.
Subscribe to:
Posts (Atom)
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு.. உடனடியாக ஒத்தி வைக்க தமிழக அரசிடம் சீமான் வலியுறுத்தல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்ட...
.jpg)
-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...