2 April 2025

 புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 'பிட்' அடிக்க அனுமதி? கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை



புதுச்சேரியில் நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த படத்திட்டத்தில் பயின்ற மாணவ மாணவிகள் எழுதிய மாதிரித் தேர்வில் 95% மாணவர்கள் படுதோல்வி. தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது.


இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திக் காட்டவும், தேர்வில் மாணவர்கள் பார்த்து எழுதும் தவறான நிலையை ஆசிரியர்கள் அனுமதித்ததாக புகார் எழுந்தது.


இதனை கண்டித்தும் தமிழ் உரிமை பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் பாவாணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் இன்று கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் ஆசிரியர்களின் தவறான செயல்களை சுட்டிக்காட்டி, மாணவர்களை புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த போராட்டத்தினால் கல்வித்துறை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 ரயில்வேயில் 9,970 உதவி ஓட்டுநர் காலிப்பணியிடங்கள்; ஏப்ரல் 10-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடக்கம்!





இந்தியன் ரயில்வே உதவி லோகோ பைலட் (உதவி ரயில் ஓட்டுநர்) 2025-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 9,970 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. 


ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு 2025 (RRB ALP Recruitment 2025)

இந்தியன் ரயில்வே இருக்கும் பல்வேறு பிரிவுகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு உதவி லோகோ பைலட் (Assistant Loco Pilot) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மொத்தம் 9,970 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 


வயது வரம்பு 

ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் எனவும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 முதல் 8 வருடங்கள் வரையும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. 


கல்வித்தகுதி 

ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கு 10-ம் வகுப்பு முடித்து குறிப்பிட்ட தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் (அல்லது) 10-ம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) 10-ம் வகுப்பு முடித்து மெக்கானிக்கல்/ எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ்/ ஆட்டோமொபைல் ஆகியவற்றில் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் (அல்லது) பல்வேறு பொறியியல் பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும். 


உடற்தகுதி

இப்பதவிக்கு A-1 மருத்துவ தரநிலையின்படி, நல்ல உடற்தகுதி, கண் பார்வை இருக்க வேண்டும். 


சம்பள விவரம் 

இப்பணியிடங்களுக்கு ரயில்வேயின் நிலை-2 கீழ் சம்பளம் வழங்கப்படும். தொடக்க சம்பளமாக ரூ.19,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு செய்யப்படும் முறை 

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இரண்டு கட்ட கணினி வழி தேர்வு நடத்தப்படும். முதல் கட்டத்தில் (CBT 1) தேர்ச்சி பெறுபவர்கள் இரண்டாம் கட்டத்திற்கு (CBT 2) தகுதி பெறுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கணினி வழி திறனறித் தேர்வு (CBAT) தேர்வு நடத்தப்படும். இத்ல் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?

ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்விற்கு ஆன்லைன் விண்ணப்பம் உத்தேசமாக ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, https://www.rrbchennai.gov.in/ என்ற சென்னை மண்டல ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 செலுத்தினால் போதும். 


முக்கிய நாட்கள்:


விண்ணப்பம் தொடங்கும் நாள் 10.04.2025


விண்ணப்பிக்க கடைசி நாள் 09.05.2025


தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்


விண்ணப்பதார்கள் அவர்களின் ஆதார் எண்ணின் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு சான்றிதழில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி, ஆதார் எண் விவரங்களுடன் ஒன்றாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் அட்டையின் புகைப்படத்தை புதுப்பித்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...