Posts

Showing posts from October 18, 2022
Image
  ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி தேர்வில் 10 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இருந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வினை முதலாம் ஆண்டில் எழுதிய 128 பேரில் 20 மாணவர்களும், 2ஆம் ஆண்டில் 196 மாணவர்களில் 22 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதன் மூலம் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 10 சதவீதம் மட்டுமே தேர்ச்சி என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயார் செய்து வழங்கி வருகிறது. பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளித்து வருகிறது.  ஆனால் இந்த நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் செப்டம்பர் மாதம் நடைபெற்றத் தேர்வில் முதலாம் ஆண்டில் 20 பேரும், 2ஆம் ஆண்டில் 22 பேரும் எ
Image
  பொது பட்டியலுக்கு கல்வியை மாற்றிய வழக்கு நவ.7ம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றிய அரசு கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது தொடர்பான அரசியல் சட்டத்தின் 42வது திருத்தம் கொண்டுவந்தது. இதை எதிர்த்து ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், 1975 முதல் 1977ம் ஆண்டுகளில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, வனம், நிர்வாகம், கல்வி, நீதி நிர்வாகம் உள்ளிட்டவை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநில அரசு பட்டியலில் இருந்த கல்வியை, பொதுப்பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது. இதனால், கல்வி சம்பந்தமாக சட்டங்கள் இயற்றும் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில சட்டங்கள் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டவையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசா
Image
  திண்டிவனம் கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு திண்டிவனம் வட்டத்தில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் நவம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் செய்திக்குறிப்பு:திண்டிவனம் தாலுகாவில் காலியாக உள்ள 19 கிராம உதவியாளர் பணியிடங்களில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலக இணைய தள முகவரி https://www.cra.tn.gov.in மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக இணைய தள முகவரி https://villupuram.nic.in ஆகிய ஏதேனும் ஒன்றில் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களை பதிவு செய்ய கடைசி நாள் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி மாலை 5:45 மணி வரை பதிவு செய்யலாம். தபால் மூலமாகவே, நேரிலோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணி நியமனத்திற்கான காலி பணியிட விபரங்கள், இடஒதுக்கீடு விபரங்கள் உள்ளிட்டவைகளை, விழுப்புரம் மாவட்ட இணையதளத்திலும், திண்டிவனம் தாசில்தார் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் உள்ள விளம்பர பலகையிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Image
  SC ST Govt Job: தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாத 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள்; விவரம் தமிழக அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்கும் மேலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதை முன்னிட்டு 2021- 22ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் தேர்வு முகாம்கள் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. எந்தத் துறையில் எவ்வளவு இடங்கள்? தமிழக அரசுத் துறைகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் (Backlog Vacancies) நிரப்பப்படாமல் உள்ளன. இதில் எஸ்சி காலிப் பணியிடங்கள் 8,173 ஆகவும், எஸ்டி பணியிடங்கள் 2,229 ஆகவும் உள்ளன. இதில் தமிழக அரசின் உள், மதுவிலக்கு (