27 January 2022

 

நவோதய வித்யாலயா பள்ளிகளில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?





மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதய வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 1925 ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணி மற்றும் காலியிடங்கள்: 


பணி: Assistant Commissioner (Group A) - 05


பணி: Assistant Commissioner (Admn) (Group A) - 02


பணி: Female Staff Nurse (Group B) - 82


பணி: Assistant Section Officer (Group C) - 10


பணி: Audit Assistant (Group C) - 11


பணி: Junior Translation Officer (Grop B) - 04


பணி: Junior Engineer (Civil) (Group C) - 01


பணி: Stenographer (Group C) - 22


பணி: Computer Operator (Group C) - 04


பணி: Catering Assistant (Group C) - 87


பணி: Junior Secretariat Assistant (Group C) - 08


பணி: Junior Secretariat Assistant - 622


பணி: Electrician Cum Plumber - 273


பணி: Lab Attendant (Group C) - 142


பணி: Mess Helper (Group C) - 629


பணி: Multi Tasking Staff (Group C) - 23


தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10, பிளஸ் 2 தேர்ச்சி, ஆங்கிலம், இந்தியில் தட்டச்சு முடித்தவர்கள், செவிலியர் டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம், பொறியியல் துறையில் பட்டம் பெற்று பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விரிவான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


தேர்வு செய்யப்படும் முறை: சிபிடி தேர்வு, நேர்முகத் தேர்வு, டிரேடு தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு, சுருக்கெழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரு பணிகளுக்கு ரூ.1,500, மூன்றாவது பணிக்கு ரூ.1,200, நான்கு முதல் 13 ஆவது பணிகளுக்கு ரூ.1000, 14,15 மற்றும் 16 ஆவது பணிகளுக்கு ரூ. 750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை:


 www.novodaya.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுபவர்கள் அதனுடன் சான்றொப்பம் பெறப்பட்ட சான்றிதழ்கள் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2022


மேலும் விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/Z3DaG.pdf என்ற லிங்கில் செ்று தெரிந்துகொள்ளவும்.

 தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு





 பொது தேர்வு ஏற்பாடு பிப்., 1ல் ஆலோசனை


தமிழகத்தில் பள்ளி கல்வி துறையின் வளர்ச்சி மற்றும் பொது தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக, சி.இ.ஒ.,க்களான முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம், வரும் 1ம் தேதி சென்னையில் நடக்கிறது.


தமிழகத்தில், பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள், திட்டங்கள் ஆகியவை குறித்து, முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி கல்வி இயக்குனரக அதிகாரிகள், அவ்வப்போது ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.


குறிப்பாக தி.மு.க., ஆட்சி வந்தபின், மாதம் தோறும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. 


இதன்படி, பள்ளிகள் திறப்பு; ஆன்லைன் வழி பாடங்கள்; 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க, வரும் 1ம் தேதி சென்னையில் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. 


இதற்கான சுற்றறிக்கை, பள்ளி கல்வி கமிஷனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் வழியே, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


பொது தேர்வுக்கான ஏற்பாடுகள், மாணவர் சேர்க்கை விபரம், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, அரசு பள்ளிகளின் ஆசிரியர் எண்ணிக்கை, பள்ளி கட்டட ஆய்வு விபரம், நர்சரி, பிரைமரி பள்ளிகளின் அங்கீகார நிலை குறித்த விபரங்களுடன் வருமாறு, சி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

 பொதுத்துறை பணியிடங்களும் குரூப் 2, குரூப் 4 தேர்வில் சேர்ப்பு..



தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் ஆகியோரை தேர்வு செய்கிறது.


இதற்காக குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


தொழில்நுட்ப பணிகள் தொடர்பான காலியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தனித்தனியே தேர்வுகளை நடத்தி வருகிறது குரூப் 4 போட்டி தேர்வானது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட பணிகளுக்கும், குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 1 தேர்வுகள் பட்டப்படிப்பை அடிப்படை தகுதியாக கொண்ட பதிவுகளுக்கும் நடத்தப்படுகின்றன.


இதில் உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு பி.இ, பி.டெக் படிப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்றும் வேளாண் அலுவலர் பதவிக்கு பிஎஸ்சி விவசாயம், தோட்டக்கலை அலுவலர் பணிக்கு பிஎஸ்சி தோட்டக்கலை, உதவி தொழிலாளர் ஆணையம் பதவிக்கு பட்டயப் படிப்புடன் தொழிலாளர் நலன் தொடர்பான டிப்ளமோ படிப்பு ஆகியவை கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தற்பொழுது தமிழ்நாடு மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், ஆவின், மாநகர போக்குவரத்து கழகம் உட்பட மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை தாங்களாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி ஆட்களை தேர்வு செய்கின்றனர். இனி இந்த‌ பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலமாக நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பொதுத்துறை நிறுவனங்களின் காலி பணியிடங்களை ஒவ்வொரு பதவியின் கல்வித் தகுதிக்கு ஏற்ப குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுடன் இணைத்து நடத்தவும் தொழில்நுட்ப கல்வி உட்பட குறிப்பிட்ட கல்வித் தகுதி உடைய பதவிகளுக்கு தனியாக தேர்வுகளை நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு உள்ளது.


அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவையான இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற பதவிகள் குரூப்-4 தேர்வுடனும் உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகள் ஊதிய நிலைக்கேற்ப குரூப்-2 அல்லது குரூப்-2ஏ தேர்வுடனும் சேர்க்கப்படும். இந்தத் தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.மேலும் இந்த தேர்வுகளுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இதன் மூலம் 5831 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேபோல குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் இத்தேர்வின் மூலம் 5255 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...