Posts

Showing posts from March 18, 2022
Image
  அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாகவும், இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின்போது, நிதியமைச்சர் தியாகராஜன், 'மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலாண்டில் செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மகளிருக்கான உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது எனக் குறிப்பிட்டார். இதனால், இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதி அமைச்சர் தியாகராஜன் அறிவிப்பு:உயர் கல்வி திட்டம்மேலும், பட்ஜெட்டின்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு
Image
  புதுச்சேரி அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் - சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற சபாநாயகர் பரிந்துரை புதுச்சேரியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் அண்மையில் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டன.அதில் அரசு பள்ளியில் பள்ளி கல்வி துறை இயக்குனர் ருத்ர கவுடு தனது மகனை வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்தார். அவரை தொடர்ந்து சில போலீசாரும் அரசு ஊழியர்களும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில் அரசின் சலுகைகளை அனுபவிக்கும் அரசு ஊழியர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்ற முதலமைச
Image
  அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில்  தேவை பணியிடங்களில் ஆசிரியர்களை உடனே நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Image
 ' எமிஸ்' பணிகளால் ஆசிரியர்களுக்கு எந்த சிரமும் இல்லை  மேலும் ஆசிரியர் நியமனம், டெட் தேர்வு போன்ற கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் பதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கம் கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு எனப்படும் 'எமிஸ்' திட்டப்பணிகளால் ஆசிரியர்களுக்கு எந்த பணிப்பளுவும் இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 17) நடந்தது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள் என்று நம்முடைய முதலமைச்சர் அடிக்கடி கூறுவார்கள். எனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற அடிப்படையில் அதிகாரிகளுடன் இதுப
Image
  பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 36,895.89 கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். பேரவையில் பேசிய அவர், தமிழக பட்ஜெட்டில் 36,895.89 கோடி ரூபாய் பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடு செய்யும் வகையில் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களால் செயல்படுத்தப்படுகிறது. இதனால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், கலை, மருத்துவம் துறையில் மேம்பட, பின்தங்கிய 10 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும். மேலும் 15 மாவட்டங்களில் எதிர்காலத்தில் கொண்டு வரப்படும், இதற்காக ரூ. 125 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த 'பேராசிரியர் அன்பழகன் திட்டம்' செயல்படுத்தப்படும். ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வகுப்புகள் என பள்
Image
  பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் ஆசிரியர்கள் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் நிலை குறித்து மண்டல ஆய்வுக் கூட்டம் சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 2013-ஆம் ஆண்டில் இருந்து 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்சி பெற்றுள்ளதாக கூறினார். ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன என்றும் அதை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு முதலமைச்சருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறினார். பொருளாதாரத்தில் பின் தங்கிய 44 வட்டாரங
Image
  தமிழக மருத்துவத் துறையில் பல்வேறு பணியிடங்கள் அறிவிப்பு! தமிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடங்கள்: 238 பணியின் தன்மை: Dark Room Assistant & Junior Analyst ஊதியம்: ரூ.19,500 – ரூ.62,000 மற்றும் ரூ.36,400 – ரூ.1,15,700/- வயது வரம்பு: 18-32 கடைசி தேதி: 05.04.2022 மேலும் விவரங்களுக்கு இந்த https://mrb.tn.gov.in/notifications.html லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Image
  TRB - Polytechnic Lecturer Candidates - ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு .  ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது.  மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன . தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள் , பணி அனுபவச் சான்றிதழ் , நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை Online வாயிலாக கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு ( 11.03.2022 முதல் 18.03.2022 வரை ) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திட கூடுதல் கால விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன.  அவகாசம் கோரி எனவே , விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 18.03.2022 -லிருந்து 25.03.2022 ஆக நீட்டிக்கப்படுகிறது
Image
  அகமதிப்பீட்டு மதிப்பெண் தேர்வு:பள்ளிகளில் தேர்வு உடுமலை;பிளஸ் 2 மாணவர்களுக்கு, அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை அளிக்கும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது.பிளஸ் 2, பொதுத்தேர்வு வரும் மே மாதம் நடத்தப்படுகிறது. முன்னதாக, மாணவர்களின், 'இன்டர்னல்' மற்றும் 'பிராக்டிக்கல்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.அவ்வகையில், அறிவியல் பாடங்களுக்கு, 30 மதிப்பெண்; கணக்கியல் பாடங்களுக்கு, 10 மதிப்பெண்கள் என கணக்கிடப்படுகிறது. அதன்படி, அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, உடுமலை கல்வி மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை அளிக்கும் வகையில், மூன்று தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதில், அதிகபட்சமாக பெறும் மதிப்பெண், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மாணவர்களுக்கு, செய்முறைத்தேர்வுக்கு முன் சமர்ப்பிக்க வேண்டிய செய்முறை விளக்க குறிப்பு நோட்டுகள், மாணவர்களிடம் சேகரிக்கப்படும். பின்னர், செய்முறை விளக்க ந
Image
  கண்டிப்பது உங்கள் நல்லதுக்கு தான்..ஆசியர்களை மரியாதையுடன் நடத்துங்கள்.. மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை.. ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது மாணவர்களின் நலனுக்காகவே என்று தெரிவித்த அமைச்சர், ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார். தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில் சேலம் மணடலத்துக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மண்டல ஆலோசனை கூட்டம்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது மாணவர்களின் நலனுக்காக தான். எனவே ஆசிரியர்களை மாணவர்கள் அனைவரும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று கூறினார். மேலும் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்கள் பணிபுரிய தயக்