10 March 2015

குரூப் 2 தேர்வு முடிவு வெளியீடு: மார்ச் 26 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) குரூப் 2(நேர்காணல் பணிக்கான இடங்கள்) பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆயிரத்து 130 குரூப் 2 பணியிடங்களுக்கான பிரதானத் தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் திங்கள்கிழமை (மார்ச் 9) வெளியிடப்பட்டன. தேர்வில் வெற்றி பெற்ற 5 ஆயிரத்து 500 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் மார்ச் 26 முதல் தொடங்கவுள்ளன. இதற்கான தகவல்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனித்தனியே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சென்னை பிராட்வேயிலுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும். இதற்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும். இதன்பின், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.


தகுதித்தேர்வை நீக்கக்கோரி ஆசிரியர்கள் பேரணி விழுப்புரத்தில் நடந்தது.

விழுப்புரத்தில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில் தகுதித்தேர்வை நீக்கக்கோரி பேரணி நடைபெற்றது.

கவன ஈர்ப்பு பேரணி
தமிழ்நாடு ஆசிரியர் இயக் கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் பாலன் தலைமை தாங்கினார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் முருகன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களது கைகளில் கோரிக்கைகள் அடங்கிய விளம்பர பதாகை களை ஏந்தி சென்றனர். விழுப்புரம் ரெயிலடியில் இருந்து தொடங்கிய பேரணி, திருச்சி சாலை வழியாக சென்று கலெக்டர் அலு வலகத்தில் முடிவடைந்தது.

தகுதித்தேர்வை நீக்கக்கோரி
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்து பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை அடிப் படையாக கொண்டு தொடக் கப்பள்ளிகளை மூடும் நோக்கத்தை கைவிட்டு அனைத்து பள்ளிகளும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுப்பது, தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய் மொழியான தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் 30 ஆண்டுகள் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.


 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...