Posts

Showing posts from December 20, 2019
Image
TET தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்கள் பணி நீக்கம்? காலியாகக்கூடிய பணியிடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடித்தவர்கள் பணி நியமனம்? தினகரன் நாளிதழ் செய்தி! தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1747 ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் ஆசிரியர்  தகுதித் தேர்வினை முடிக்க வேண்டும் என்பது விதியாகும். அதன் அடிப்படையில் அரசு பள்ளிகளை பொறுத்தவரை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் ஆசிரியர்களாக நியமனம்  செய்யப்படுகிறார்கள். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதுவரை 1747 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வினை முடிக்கவில்லை. தமிழக அரசு அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்ட விதிகளை அமல்படுத்திய 2011-ம் ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித்  தேர்வினை முடிக்க வேண்டுமென்று அரசு உத்தரவிட்டிருந்தது. நான்கு முறை தமிழகத்தில் டெட் தேர்வு நடத்தப்பட்டு தேர்வில் தகுதி பெற வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில் 1747 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அனைவருக்கும்  கல்வி
Image
TRB - உதவிப் பேராசிரியர் தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு. ( நாள் : 19.12.2019 ) 1. அரசு கலை ( ம ) அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவிற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை எண் . 12 / 2019 நாள் . 28 . 08 . 2019 மற்றும் 04 . 10 . 2019 அன்று வெளியிடப்பட்டது . 15 . 11 . 2019 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் ஏற்கனவே விண்ணப்பித்து பணி அனுபவச் சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் , கல்வியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதால் அவ்விவரங்களை பதிவு செய்திட பின்னர் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது .  2 . தற்போது ஏற்கனவே முழுமையாக விண்ணப்பித்து பணி அனுபவச் சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடாத விண்ணப்பதாரர்கள் பணி அனுபவ சான்றுகளை மட்டும் பதிவேற்றம் செய்திடவும் ( அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித