Posts

Showing posts from May 5, 2025
Image
  விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.  இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Image
  காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 10 வரை அவகாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக காவல்துறையில் 1,299 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்.7-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நேற்றுடன் (மே 3) முடிவடைந்தது. இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 10-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், சமர்ப்பிக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தில் மே 15 வரை திருத்தம் செய்துகொள்ளலாம் என்றும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி வகுப்பினருக்கு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் 3-ம் பாலினத்தி...