Posts

Showing posts from May 4, 2023
Image
  நீட் தேர்வுக்கு மாணவர்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும்…?  இந்த ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு (NEET UG 2023) மே 7ம் தேதி நடக்க உள்ளது. அந்த தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்கள் இந்தியாவிலும் (485 நகரங்கள்) வெளிநாட்டிலும் (14 நகரங்கள்) எழுதுகின்றனர். பேனா மற்றும் பேப்பர் (PBT) முறையில் தேர்வு நடக்கும். நீட் தேர்வு - வழிகாட்டு நெறிமுறைகள் மாணவர்கள் தங்களுக்கென பிரத்யேகமான குடிநீர் பாட்டில்களையும். சானிடைசரையும் கொண்டு வர வேண்டும். குடிநீர் பாட்டில்கள் மற்றும் சானிடைசர் நீங்கலாக அனுமதிச்சீட்டை மட்டுமே மாணவர்கள் எடுத்துச்செல்ல முடியும். 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்குள்ளும், இதர 50 விழுக்காடு கண்காணிப்பாளர்கள் தேர்வறைக்கு வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபடுவர். மாணவர்களுக்கான ஆடை மற்றும் கோவிட் கட்டுப்பாட்டு விதிகள் என்னவென்று பார்போம். தேர்வு ஆணையம் தேர்வுக்கு வரும் மாணவர்கள் எந்தவிதமான உடை அணிந்து வர வேண்டும் என்ற கட்டுபாடுகளை விதித்துள்ளது.  உடை கட்டுப்பாடு : பெண்கள் முழுக்கை சட்டை அணிந்து வரக்கூடாது அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். ஜீன்ஸ் அணியக் கூடாது. துப்பட்டா அணியக் க
Image
  TNTET நியமன தேர்வு ரத்தா?? பள்ளிக்கல்வித்துறை எடுக்க போகும் முடிவு என்ன? தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் தகுதியானவர்களை, பணியமைத்துவதற்காக TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில் தான், அரசுப் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க, TNTET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் தகுதியானவர்களை, பணியமைத்துவதற்காக TNPSC தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த வகையில் தான்,  அரசுப் பள்ளிகளில் திறமையான ஆசிரியர்களை நியமிக்க, TNTET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை அரசு கடந்த 2012ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. முதலில் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் பணி என்று இருந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு மாறியது. அதாவது, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பணி நியமனத்திற்காக மேலும் தேர்வு ஒன்றை எழுத வேண்டும் என்று தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நியமன தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வர
Image
  10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: தேர்வு முடிவுகள் மே 17-ல் வெளியீடு தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதையடுத்து பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 தேர்வு முகாம்களில் மேற்கொள்ளப்பட்டன.  ஏப்.24-ல் தொடங்கிய இந்தப்பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. இப்பணியில் 60,000 ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் இன்றுடன் (மே 4) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Image
  ஒரே நாளில் 4 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி சாதனை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குருப்-1 முதல்நிலைத் தேர்வு, டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவை நிருபர் தேர்வு, மீன்துறை ஆய்வாளர் தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சுகாதார அலுவலர் தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகளையும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. அடுத்தகட்டத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியலை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in)தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுகால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தேர்வு முடிவைகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வெளியிட வேண்டும். குறிப்பாக, கணினி வழியில்நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை ஒரே மாதத்தில் வெளியிட வேண்டுமென தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Image
  நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..! இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்குரிய ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றிற்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல் ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைந்தது. இந்நிலையில், இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட்டுகளை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து, மே 7 ஆம் தேதி வரை விண்ணப்பதா