Posts

Showing posts from September 8, 2022
Image
  சீருடைப் பணியாளர் தேர்வுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி: செப்.14-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான அரசின் இலவச பயிற்சி வகுப்பில் சேர செப்.14-ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் குடிமைப்பணிகள் பயிற்சி மையத் தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு தமிழக அரசின்சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயர் கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிஆகிய மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-4 எழுத்துத் தேர்வில் இப்பயிற்சி மையத்தின் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலைசிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மட்டும் கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சி குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் இதற்கான விண்ணப்பப் படிவம் ஆகியவை www.civilservicecoaching.com என்ற இணைய
Image
  பள்ளிக் கல்வித் துறைக்கு மீண்டும் இயக்குநர் பணியிடம்-திண்டுக்கல் லியோனி கோரிக்கை பள்ளிக் கல்வித் துறை மீண்டும் நன்றாக செயல்பட வேண்டுமென்றால், இயக்குநர் பணியிடத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே திண்டுக்கல் லியோனி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய அவர் கூறுகையில், 'நானும் ஆசிரியராக இருந்தவன். ஆசிரியர்களின் கோரிக்கையான பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தை மீண்டும் கொண்டு வந்தால்தான் பள்ளிக் கல்வித் துறை மீண்டும் நன்றாக செயல்படும். மேலும், கற்பித்தல் பணியை விட பதிவேடுகள் பராமரிக்கும் பணிகள்தான் ஆசிரியருக்கு அதிகம் உள்ளது. அதை குறைத்திட வேண்டும்' என்றார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், 'ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவதே அரசின் தலையாயக் கடமை' என
Image
  நீட் தேர்வு முடிவுகள்: இந்த கட் ஆப் எடுத்தால் மருத்துவ இடங்கள் உறுதி இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS, சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET - UG தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். நடப்பு 2022-2023-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. அகில இந்திய அளவில் 17,64,571 பேர் தேர்வை எழுதியதில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 1,22,995 மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. 2020-ல் 57.44%, 2021-ல் 54.40% என்று இருந்த தேர்ச்சி விகிதம் 2022-ல் 51.30% ஆக குறைந்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களைக் கொண்டு நாடு முழுவதும் உள்ள 91,927 MBBS இடங்கள், 27,698
Image
  விழுப்புரம் அரசு கல்லூரியில் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் விழுப்புரம்அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.காம்.பட்டப் படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சோக்கைக்கு விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கியது. 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 95,000 இடங்களுக்கு 3,15,000-க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். சான்றிதழ் பதிவேற்றம் செய்திருந்த மாணவர்களுக்கான தரவரிசை மற்றும் தேர்வு பட்டியலை அந்தந்த கல்லூரி இணையதளம் மற்றும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் மாணவர்களுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தேர்வுப் பட்டியலை வெளியிட்ட கல்லூரிகள், வெள்ளியன்று சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தி முடித்துள்ளது. அதைத்தொடர்ந்து, (ஆகஸ்ட் 29) பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொடங்கியுள்ளன. செப்டம்பர் 4 ம் தேதி வரை முதற்கட்ட மாணவர் சேர