4 September 2022

 டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் எப்போது? - முக்கிய அறிவிப்பு வெளியானது!



நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.


அதேபோன்று, குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


தமிழக அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5413 காலிபதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வை டிஎன்பிஎஸ்சி கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது. அதேபோன்று, 7138 குரூப் 4 லிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் ஜுலை 24ம் தேதி நடைபெற்றது.


குரூப் 2/2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுற்று மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், தேர்வெழுதிய லட்சக்கணக்கான மன உளைச்சலில் இருந்து வந்தனர். டிஎன்பிஎஸ்சி ஆள் சேர்க்கையில் பெண்களுக்கு அளிக்கப்பட இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தீர்ப்பு வெளியான பிறகு, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், பல்வேறு அரசுப் பணி சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது.


அதன்படி, நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டி.ஆர்.பி., தலைவர் பேச்சுக்கு தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு



ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய இணையவழிக் கூட்டத்தில் டி.ஆர்.பி., தலைவர் அதிகார தோரணையில் பேசியதாக தலைமையாசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கல்வித்துறை கமிஷனர் நந்தகுமாருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.


தமிழகம் முழுவதும் செப்.10ல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. இதுதொடர்பாக மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி ஒதுக்குவது தொடர்பாக இணையவழிக் கூட்டம் டி.ஆர்.பி., தலைவர் லதா தலைமையில் நடந்தது.அப்போது, பணிபுரியும் மாவட்டத்திலேயே தலைமையாசிரியர், கணினி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி வழங்க வலியுறுத்தினர்.


 அவர்களிடம், 'நாங்கள் எந்த மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்கிறோமோ அந்த மாவட்டத்தில் தான் பணி செய்ய வேண்டும்' என அதிகார தோரணையில் தலைவர் லதா பேசி, தலைமையாசிரியர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் ரவிச்சந்திரன் கமிஷனர் நந்தகுமாருக்கு எழுதிய புகாரில், 'டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளில் பணிபுரியும் மாவட்டத்திலேயே தேர்வுப் பணி ஒதுக்க தொடர்ந்து கோரிக்கை வைக்கிறோம். அதை கண்டுகொள்ளாமல் ஆசிரியர்களை அலைக்கழிக்கும் வகையிலும், அதிகார குவியலின் ஒட்டுமொத்த உருவமாகவும் டி.ஆர்.பி., தலைவர் பேசியது கண்டிக்கத்தக்கது.


இது தலைமையாசிரியர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. ஏற்கெனவே டி.ஆர்.பி.,யின் இதுபோன்ற அணுகுமுறையால் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, கல்வி அதிகாரிகள் வேண்டுகோளால் கைவிடப்பட்டது. மீண்டும் போராட்ட சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம். பணியாற்றும் மாவட்டத்திலேயே தேர்வுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி



பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து கல்வியாளர் சங்கமம் நடத்தும் ஆசிரியர்களுடன் அன்பில், நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சி கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.



பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் "ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்" என்ற நிகழ்ச்சி தனியார் கல்லூரி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.


அப்போது பேசிய அன்பில் மகேஷ், "பெரம்பலூர் மாவட்டம் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியில் மாநிலத்தில் முதல் இடம் பிடித்துள்ளது. மற்ற மாவட்டங்கள், ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. அதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்ட நிகழ்விலும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற "ஆசிரியர் மனசு" என்ற புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.


இதற்காக இணையதளங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர்கள் மற்றும் தங்களது குறைகளை தெரிவித்து வருகின்றனர். ஒரே மாதிரியாக உள்ள பொதுக்குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற குறைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு படிப்படியாக நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.


அதன்பின் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "பெரம்பலூர் மாவட்டம் தருவதை போல மற்ற மாவட்டங்களும் இதேபோல தேர்ச்சி முடிவுகளை தரும் நோக்குடன் செயல்பட வேண்டும். 


தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையை இழக்க கூடாது. மதிப்பெண்கள் - ஒருவரை மதிப்பீடு செய்யாது. அதற்காகத் தான் தமிழ்நாடு முதலமைச்சரால் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.



 தமிழக அரசில் 3.5 லட்சம் காலி பணியிடங்கள்



தமிழகத்தில் அரசு பணிகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.



இதனால் முறைகேடாக ஊழியர்கள் நியமனம் செய்வது தடுக்கப்படும் என்று அரசுஅறிவித்த நிலையில் நேரடி நியமனம் மற்றும் தேர்வு மூலம் நியமிக்கப்படும் அனைத்து வகையான நியமனங்களும் வெளிப்படை தன்மையுடன் இருக்கின்றது.


இந்நிலையில் தமிழக அரசில் காலி பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு துறையில் தற்போது 3.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐந்து வருடங்களுக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பாமல் வைத்துவிட்டு அவற்றை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.


இது ஒரு வகையான ஆட்குறைப்பு நடவடிக்கைதான். இதன் காரணமாக 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிக பணியாளர்களாக இருக்கும் அனைவரும் வேலை இழக்க கூடிய நிலை உருவாகும். இதனால் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். எனவே தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்களை தற்போது உடனடியாக நிரப்ப வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழக அரசு பணியில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.இந்த அறிவிப்பு அரசு பணிக்காக காத்திருப்போர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...