Posts

Showing posts from January 21, 2017
Image
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் 4–வது நாளான நேற்று  வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் 4–வது நாளான நேற்று  வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இளைஞர்கள், பொதுமக்களும் குவிந்ததால் புதுவையே ஸ்தம்பித்தது. நிரம்பி வழிந்த திடல் புதுச்சேரியில் கடந்த 17–ந்தேதி மாலை முதல் ரோடியர் மில் திடலில்  கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டம்  4–வது நாளாக நேற்று நீடித்தது. காலை 8 மணி முதலே மாணவ,  மாணவிகள் ரோடியர் மில் திடல் நோக்கி சாரைசாரையாக வந்த  வண்ணம் இருந்தனர். மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று முழுஅடைப்பு  என்பதால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடாத  நிலையில் ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்த  ரோடியர் மில் திடலுக்கு நடந்து வந்து கலந்து கொண்டனர்.  இதுமட்டுமின்றி இரு சக்கர வாகனங்களிலும் வந்து குவிந்தனர்.  பெற்றோர் பலர் தங்களது 2 சக்கர வாகனங்களில் மாணவர்களை  கொண்டு வந்து விட்டனர். மா
Image
ஜல்லிக்கட்டு களம் - தமிழகம் முழுவதும் லட்சகணக்கில் திரண்டனர் தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர். ஜனவரி 21, 08:50  AM சென்னை, தமிழகம் முழுவதும் போராட்ட களத்தில் 25 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.  சென்னையில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 17-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரம் இளைஞர்களுடன் தொடங்கிய போராட்டம் இன்று உலகமே வியந்து பார்க்கும் வகையில் விசுவரூபம் எடுத்துள்ளது. இதன் மூலம் புரட்சி போராட்ட களமாக மெரினா கடற்கரை உருவெடுத்துள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த  மக்களும் தலைநகருக்கு படையெடுத்து வந்து இளைஞர்கள்  போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.பொதுமக்கள்,  வியாபாரிகள், பல்வேறு அமைப்பினர், தொழிற்சங்கத்தினர், ஜல்லிக்கட்டு  ஆர்வலர்கள் என சாதி, மதம், இன வேறுபாடின்றி நேற்று மெரினா கடற்கரையை நோக்கி வந்தனர். உணர்ச்சிகரமாக போராடும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தங்களுடைய எழுச்சிமிகு ஆதரவை
'நெட்' தேர்வு நாளை நடக்குமா? மத்திய கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., சார்பில், நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள, 'நெட்' தகுதித் தேர்வு, நடைபெறுமா என்ற குழப்பம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உதவி பேராசிரியர்கள் தேர்வு மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு, 'நெட்' தகுதித் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம், தமிழகத்தில் தீவிரமடைந்து, கல்லுாரி, பல்கலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 'நெட்' தகுதித் தேர்வு, நாளை நடக்குமா என்ற குழப்பம் எழுந்துள்ளது. கோவை மாவட்ட, 'நெட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் நவமணி கூறுகையில், ''நெட் தேர்வு நடைபெறும் தேதியில், எவ்வித மாற்றமும் இல்லை. டில்லியிலிருந்து கோவை வந்துள்ள அதிகாரிகள், ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில், 17 கல்வி நிறுவனங்கள், தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.