18 May 2022

 தமிழ்நாட்டில் ஜூன் 20-ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு




தமிழ்நாட்டில் ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டுக்கான பள்ளி வகுப்புகள் ஜூன் மாதம் இருபதாம் தேதி திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது ஒரு வாரம் முன்னதாகவோ பின்னராகவோ இருக்கலாம். தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் தற்போது 10 ஆயிரத்து 300 க்கு மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கழிவறை உட்பட 18 ஆயிரம் கட்டிடங்கள் கட்டப்படும். கொரோனா காலத்துக்கு பின்னர் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சம் உயர்ந்து, தற்போது 53 லட்சமாக உள்ளது. அதிகபடியான ஆசிரியர்கள் தேவைப்படும் இடத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். பேரறிவாளன் விடுதலை குறித்து அரசியல் பார்க்காமல் அனைவரும் குரல் கொடுத்துள்ளனர். ராஜூவ் காந்தி குடும்பத்தினரே அவர்களை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பேரறிவாளன் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனது கருத்து" எனக் கூறினார்.

 பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு.



கொரோனாவிற்கு பின் நடந்த அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் ஆன 1.18 லட்சம் மாணவர்களின் நிலை குறித்து அறிக்கை தர கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2019 ல் கொரோனா பரவல் துவங்கியது. தொடர்ந்து 2 ஆண்டுகளாக பள்ளி திறக்கப்படவில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். பள்ளி விடுமுறையால் ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று விட்டனர். பல மாணவர்கள் பிழைப்பிற்காக பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.


தற்போது நடக்கும் 10 ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கை 1.18 லட்சமாக உள்ளது. இதன்படி 10 ம் வகுப்பு படிக்கும்12 லட்சம் பேரில் 42,000, பிளஸ் 1 படிக்கும் 9 லட்சம் பேரில் 43,533,பிளஸ் 2ல் 10 லட்சம் பேரில்32,600என 1 லட்சத்து 18 ஆயிரத்து 133 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகினர்.


கொரோனாவிற்கு முன்னர் வரை நடந்த அரசு தேர்வுகளில் இறப்பு, இடைநிற்றல் என சொற்ப அளவிலேயே மாணவர் 'ஆப்சென்ட்' இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு எழுத தகுதி பெற்ற 31 லட்சம் பேரில் 1.18 லட்சம் மாணவர் 'ஆப்சென்ட்' ஆனது கல்வித்துறையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 


இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில் பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்கள் விபரம், வேலைக்கு சென்றால் அவர்களை பள்ளிக்கு அழைத்து வருதல், பிற காரணங்களை அறிந்து பள்ளிக்கு வரவைத்தல் பணிகளுக்காக கலெக்டர்கள் மூலம் அரசு விபரத்தை சேகரிக்கிறது, என்றார்.

 TRB: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு.! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு.!




பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான தெரிவுப் பட்டியல் வெளியீடு குறித்த ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



இது குறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 2017-2018 ஆம்‌ ஆண்டிற்கான அரசுப்‌ பல்தொழில்நுட்பக்‌ கல்லூரிகளுக்கான 1060 விரிவுரையாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்‌ மூலம்‌ பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரிய அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டன. கணினி வழித்‌ தேர்வுகள்‌ 8.2.2021 முதல்‌ 1312.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வர்களின்‌ மதிப்பெண்கள்‌ 08.03.2022 அன்று ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளன. 11.03.2022 நாளிட்ட ஆசிரியர்‌ தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில்‌, பணிநாடுநர்கள்‌ தங்களது கல்வித்‌ தகுதி மற்றும்‌ பணி அனுபவம்‌ தொடர்பான கூடுதல்‌ சான்றிதழ்களை 7 ஆவணங்களை ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளம்‌ வழியாக 11.03.2022 முதல்‌ 01.04.2022 வரை பதிவேற்றம்‌ செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.


கூடுதல்‌ சான்றிதழ்களை / ஆவணங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்வது தொடர்பாக பல்வேறு பணிநாடுநர்களிடமிருந்து 1103.2022 முதல்‌ 01.04.2022 வரை 7,383 கோரிக்கை மனுக்கள்‌ வரப்பெற்றன. அவ்வாறு வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள்‌ கீழ்க்காணும்‌ 8 தலைப்புகளில்‌ வகைப்படுத்தப்பட்டன.


User ID மற்றும்‌ Login Password தொடர்பாக பெறப்பட்ட 2520 கோரிக்கைகளுக்கு தகுந்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு அவ்விவரம்‌ சார்ந்த பணிநாடுநர்களுக்கு மின்னஞ்சல்‌ வாயிலாகத்‌ தெரிவிக்கப்பட்டது. நன்னடத்தை சான்றிதழ்‌ தொடர்பாக 4,890 கோரிக்கை மனுக்கள்‌ வரப்பெற்றன. அவற்றில்‌ Conduct Certificate From the Head Of the Instution தொடர்பான கோரிக்கைகளுக்கு பணிநாடுநர்‌ இறுதியாகப்‌ பயின்ற கல்வி நிறுவனத்தால்‌ வழங்கப்பட்ட மாற்றுச்‌ சான்றிதழ்‌ பிற சான்றிதழில்‌ நன்னடத்தை குறிப்பிடப்பட்டிருந்தால்‌ அச்சான்றிதழை பதிவேற்றம்‌ செய்யலாம்‌ எனவும்‌, மாற்றுச்‌ சான்றிதழ்‌ பிற சான்றிதழில்‌ நன்னடத்தை குறிப்பிடப்படாத நிலையில்‌ பணிநாடுநர்‌ இறுதியாகப்‌ பயின்ற கல்விநிறுவனத்திடமிருந்து நன்னடத்தை சான்றிதழைப்‌ பெற்று பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌ என சார்ந்த பணிநாடுநர்களுக்கு மின்னஞ்சல்‌ வாயிலாகத்‌ தெரிவிக்கப்பட்டது. நன்னடத்தை தொடர்பாக பெறப்பட்ட பிற கோரிக்கைகள்‌ நிராகரிக்கப்பட்டன.


பணி அனுபவச்‌ சான்றிதழ்‌ பெறுவது தொடர்பாக 3591 கோரிக்கை மனுக்கள்‌ வரப்பெற்றன. அவற்றில்‌ பணி அனுபவச்‌ சான்றிதழில்‌ மேலொப்பம்‌ பெறுவது பணி அனுபவம்‌ பகுதியொத்திருத்தல்‌, செயல்படாமல்‌ இருக்கும்‌ கல்லூரிகள்‌ / கல்வி நிறுவனங்களில்‌ பணி அனுபவச்‌ சான்று பெறுதல்‌ மற்றும்‌ அறிவிக்கை தேதிக்கு முன்னர்‌ பெறப்பட்ட பணி அனுபவச்‌ சான்றிதழ்‌ தொடர்பான கோரிக்கைகள்‌ சார்ந்து ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை ஏதுமில்லை என்பதால்‌ அதுபோன்ற, கோரிக்கைகள்‌ நிராகரிக்கப்பட்டன.


விண்ணப்பத்தில்‌ பணி அனுபவத்தை தவறுதலாகப்‌ பதிவேற்றம்‌ செய்துவிட்டு திருத்தம்‌ கோரிய 1444 கோரிக்கைகள்‌, வெளி மாநிலங்களில்‌ பெற்றுள்ள பணி அனுபவம்‌ தொடர்பான 65 கோரிக்கைகள்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ பெற்றுள்ள பணி அனுபவம்‌ தொடர்பான 235 கோரிக்கைகள்‌ மற்றும்‌ பணி அனுபவம்‌ குறித்த தெளிவுரைகள்‌ தொடர்பான 816 கோரிக்கைகள்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி 2560 பணிநாடுநர்களிடமிருந்து கோரிக்கைகள்‌ பெறப்பட்ட மின்னஞ்சல்‌ முகவரிக்கு விண்ணப்பதாரர்களால்‌ அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்த விவரங்கள்‌ ஒரு வார காலத்திற்குள்‌ தெரிவிக்கப்படும்‌.

 இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்



இந்தியா முழுவதும் பல்வேறு வட்டங்களில் காலியாக உள்ள BPM/ABPM/ Dak Sevak என மொத்தம் 38,926 கிராமின் டக் சேவக் (Gramin Dak Sevak - GDS) பதவிகளுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இந்தியா போஸ்ட் (India Post)அழைப்பு விடுத்து உள்ளது.


இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூன் 05, 2022 என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்வமும், தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருப்பதும், சைக்கிள் ஓட்ட தெரிந்திருப்பதும் கட்டாயம் ஆகும்.


இந்தியா போஸ்ட் Gramin Dak Sevak ஆட்சேர்ப்பு 2022:


பதவி: கிராமின் டக் சேவக் (GDS)


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 38,926


சம்பள அளவு: மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை


2022-ஆம் ஆண்டிற்கான இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு தகுதி வரம்பு:


பள்ளி கல்வியில்10-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதற்கான சான்றிதழ் வேண்டும். மேலும் இந்த 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழானது இந்திய அரசு /மாநில அரசுகள் / இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று பெற்றிருக்க வேண்டும். கணிதம், உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழாகவும் அது இருக்க வேண்டும்.


வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்


விண்ணப்ப கட்டணம்:


UR/OBC/EWS பிரிவை சேர்ந்த ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100


SC/ST/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை


கிரெடிட் /டெபிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் / UPI அல்லது ஏதேனும் தலைமை அஞ்சல் அலுவலகம் மூலம் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.


எப்படி விண்ணப்பிப்பது.?


ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் பதிவு செய்யும் போது அப்லோட் செய்ய வேண்டும்.


இந்தியா போஸ்ட் GDS ஆட்சேர்ப்பு 2022-ன் முக்கிய தேதிகள்:


ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான துவக்க தேதி: மே 02, 2022


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூன் 05, 2022


கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: ஜூன் 05, 2022


பணிகளுக்கு தேர்ந்தெடுக்கும் செயல்முறை:


விண்ணப்பதாரர்கள் கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி தபால் மாஸ்டர் (ABPM) மற்றும் டக் சேவக் (Dak Sewak) ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களின் 10-ஆம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 குரூப் 2 தேர்வு: தமிழகத்தில் 5,000 பதவியிடங்களுக்கு 11.78 லட்சம் பேர் போட்டி




தமிழகத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதவுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளில் காலியாக உள்ள 5,000 பதவியிடங்களுக்கான தேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.


இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணைய தலைவர் பாலசந்திரன் அளித்த பேட்டியில், "குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி 21-ம் தேதி நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வு நடைபெறும் மையத்திற்கு வர வேண்டும். 9 மணிக்கு பிறகு தேர்வு அறைக்கு செல்ல அனுமதி இல்லை. 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி 12.30 மணிக்கு தேர்வு நிறைவு பெறும். ஆனால் 12.45 மணி வரை தேர்வர்கள் தேர்வு அறையில்தான் இருக்க வேண்டும்.


தமிழகம் முழுவதும் 11.78 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். தற்போது வரை 9 லட்சம் பேர் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். அனைவரும் வரும் நாட்களில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்கிறோம்.


இதில் ஆண்கள் 4.96 லட்சம் பேர். பெண்கள் 6.81 லட்சம் பேர். திருநங்கைகள் 48 பேர். மாற்றுத்திறனாளிகள் 14,000 பேர். 79,000 பேர் தமிழ் வழியில் படித்தோம் என்று விண்ணப்பித்துள்ளனர். பொது ஆங்கிலம் பிரிவில் 2.31 லட்சம் பேரும், பொதுத் தமிழ் பிரிவில் 9.46 லட்சம் பேரும் தேர்வு எழுதவுள்ளனர்.


38 மாவட்டங்களில் 117 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4012 தலைமை கண்காணிப்பாளர்கள், 58,900 தேர்வு கூட கண்காணிப்பாளர்கள், 993 நடமாடும் குழுக்கள், 323 பறக்கும் படைகள், 6400 கண்காணிப்பு குழுக்கள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர்.


சென்னையில் 7 மையங்களில் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். அடுத்த படியாக மதுரையில் 64 ஆயிரம் பேர், சேலத்தில் 63 ஆயிரம், திருச்சியில் 50 ஆயிரம், கோவையில் 48 ஆயிரம் பேர் தேர்வு எழுத உள்ளனர். ஜூன் மாதம் இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

 குரூப் 2 வினாக்கள் பிழையின்றி அமையுமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு




குரூப் 2 வினாக்களை பிழையின்றி தயாரிக்க வேண்டுமென தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான தேர்வினை வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. சுமார் 11 லட்சம் பேர் இத்தேர்வினை எதிர்கொள்கின்றனர். ஓரிரு வினாக்கள் பெரும்பாலும் பிழைகளுடன் தயாரிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. குரூப் 2, குரூப் 4 தேர்வுகளை முறையே 11 லட்சம், 22 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து எழுதுகின்றனர். ஆனால், வினாக்கள் தவறாக கேட்கப்படுவதால் 1 தேர்வர் பல லட்சம் பேருக்கு பின்னால் தள்ளப்படுகின்றார். எனவே, தேர்வாணையம் மாணவர்களின் வாழ்க்கை மற்றும் வேலை தொடர்பானது என்பதை கருத்தில் கொண்டு பிழைகள் இல்லாமல் வினாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...