Posts

Showing posts from November 24, 2021
  TRB தேர்வுக்கான முக்கிய அறிவிப்பு.   தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த உரிய ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் TRB தேர்விற்கு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யுமாறு கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை கடிதம் அனுப்பியுள்ளது. TRB தேர்வு: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் TRB தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017 – 18 ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் 2019ம் ஆண்டு அதற்கான அறிவிப்பு TRB தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்த தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசுத் தேர்வுகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வ
  புதுச்சேரி பள்ளிகள் திறப்பு எப்போது?: நமச்சிவாயம் ஆலோசனை ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளுடன், கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. ஒன்றரை ஆண்டிற்கு பின், கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, சுழற்சி முறையில் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால், கடந்த 8ம் தேதியில் இருந்து, ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை துவங்கி கனமழை பெய்து வந்ததது. அதனால், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது, மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால், மீண்டும் பள்ளிகள் திறப்பது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆலோசனை நடத்தினார்.கல்வித் துறை செயலர் அசோக்குமார், பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோருடன் அமைச்சர்