Posts

Showing posts from April 17, 2023
Image
  பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியின் ஆழமான பதில் பிளஸ் 2-க்குப் பிறகு படிப்பதற்கு நிறைய படிப்புகள் இருந்தாலும், பள்ளி மாணவர்களுக்கு அதில் அதிக தெளிவு தேவைப்படுகிறது. உயர் கல்வியை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? அதற்கு எத்தகைய கண்ணோட்டமும் தயாரிப்பும் தேவை? - இந்தக் கேள்விகள் மிகவும் அடிப்படையானவை மட்டுமல்ல; ஆழமானவையும்கூட. இத்தகைய கேள்விகளுக்கு ஆழமாக பதில் அளித்திருக்கிறார் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி. பிளஸ் டூ தேர்வு எழுதியுள்ள மாணவர்களில் பலருக்கும் அடுத்து என்ன படிப்பது என்பதில் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அத்தகைய மாணவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன? பொதுவாக அவர்கள் எந்தெந்த படிப்புகளை தேர்வு செய்யலாம் என கூறுவீர்கள்? 'முதலில் தாங்கள் விரும்பும் பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்து படிக்க வேண்டும். பெற்றோர்கள் திணிக்கக் கூடாது. திணிக்கப்பட்டால் மாணவர்களால் முழு மனதோடு படிக்க முடியாது. இதனால், மாணவர்களுக்கு நிறைய பின்னடைவுகள் ஏற்படுகின்றன. எனவே, பிடித்த பாடத்தை படிப்பது என்பது மிகவும் முக்கியம். பெற்றோர்கள் அத
Image
  NEET UG 2023; நீட் தேர்வில் அதிக மதிப்பெண் வேண்டுமா? கண்டிப்பாக இதைச் செய்யுங்கள்! இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) என்பது இந்தியாவின் மிகவும் போட்டித்தன்மை கொண்ட நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாகும். NEET UG தேர்வுக்கான தயாரிப்பு என்பது ஒரு சவாலான பணியாகும், இதற்கு நிலையான முயற்சி, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.  NEET UG தேர்வுக்கு தயாராவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று முந்தைய ஆண்டுகளின் வினாத் தாள்களை பயிற்சி செய்வதாகும்.  நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வில் முதலிடம் பெற்றவர்கள் கூட, சிறந்த முடிவுகளுக்கு மாதிரித் தேர்வுகளுக்குத் தோன்றி மாதிரித் தாள்களை பயிற்சி செய்வதைப் பரிந்துரைக்கின்றனர். முந்தைய ஆண்டுகளின் வினாத் தாள்களை பயிற்சி செய்வது NEET UG தேர்வுக்கான தயாரிப்பின் இன்றியமையாத அங்கமாகும். இது தேர்வு முறை, கேட்கப்படும் கேள்விகளின் வகை மற்றும் தேர்வின் சிரம நிலை ஆகியவற்றை மாணவர்கள் புரிந்துகொள்ள உதவுகிறது.  முந்தைய ஆண்டுகளின் வினாத் தாள்களை பயிற்சி செய்வது மாணவர்களுக்குத் தேர்வுக்குத் தேவையான நேர மேலாண்மை பற்றிய யோசனை
Image
  அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை... விரைவில் தீர்வு!! கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்ள்ளியில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் அறிவுரை படி அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது எனவும் அரசு பள்ளிகளை மேம்படுத்த முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் எனவும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்களது மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் அரசு பள்ளிகளில் பல சலுகைகளை நாங்கள் கொடுக்கிறோம் எனவும் இன்று அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிகம் வருகிறார்கள் எனவும் கூறினார். மேலும் பேசிய அவர் கொரோனா காலத்திற்கு முன்பாக 12 லட்சம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், அதன் பிறகு 6 லட்சம் மாணவர்கள் ஆண்டிற்கு சேர்ந்து வந்தனர் எனவும் இது கடந்த 2 ஆண்டுகளாக 11 லட்சமாக உள்ளது எனவும் கூறிய அமைச்சர் அரசு பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது எனவும் தெரி