Posts

Showing posts from March 4, 2024
Image
  TNPSC: குரூப் 4 தேர்வு.. இன்று முதல் விண்ணப்பங்களை திருத்தலாம்.!!! தமிழகத்தில் குரூப்-4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மார்ச் 4ஆம் தேதி இன்று முதல் மார்ச் 6 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என tnpsc தெரிவித்துள்ளது. 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
Image
  பொறியாளர், சுகாதார ஆய்வாளர் நேரடி தேர்வு; காலியிட எண்ணிக்கை 2,455 ஆக அதிகரிப்பு - நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர், பணி ஆய்வாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான நேரடி தேர்வில்காலியிடங்களின் எண்ணிக்கை2,455 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவித்துள்ளது. உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பதவிகளில் 1,933 காலியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி வெளியிட்டிருந்தது.  இந்த காலியிடங்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர்மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றில் உள்ளன. பணியின் தன்மைக்கேற்ப சிவில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகள், டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்கள், பட்டப்படிப்புடன் சுகாதார ஆய்வாளர் டிப்ளமோ முடித்தவர்
Image
  பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 4) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை தமிழகத்தில் 8.25 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கிநடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளதுபிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்.  முதல் நாளில் தமிழ் உட்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207மாணவர்கள், 5,000 தனித்தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் அடங்குவர். பொதுத்தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் பணியில் 46,700ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறை