Posts

Showing posts from March 26, 2022
Image
  பகுதிநேர ஆசிரியர்கள் எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம்... பள்ளிக்கல்வித்துறை அதிரடி!! தமிழகத் தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கடந்த வாரம் டி.பி.ஐ. வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் பிரதிநிதிகள் தலைமை செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கோரிக்கை மனு பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் மூலம் அரசுக்கு தங்களுடைய நிலைமையை உணர்த்திய பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனிடையே
Image
  பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரமா? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..! பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. அந்த பணி முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமண ஆணையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது பணி தேவையில்லை என்று அரசு கருதினால், முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணி நீக்கம் செய்யப்படலாம். பகுதி நேர ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் என்பது அரசு பணியிடங்கள் இல்லை. அந்த அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லைஎன்று கூறப்பட்டுள்ளது.
Image
  சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியானது!! சென்னை  செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தாக்கம் குறைய தொடங்கிய நிலையில் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் எடுக்கப்பட்டதுடன், செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வுகளாக நடத்தவும் சென்னை பல்கலைக்கழகம் முடிவெடுத்து. அதன்படி கடந்த ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. அனைத்து கல்லூரிகளிலும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தேர்வுகள் முறையாக நடைபெற்றன. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://result.unom.ac.in-ல் மற்றும் https://egovernance.unom.ac.in/resul
Image
  விழுப்புரத்தில் இன்று (26-03-2022) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.. விவரம் உள்ளே...!! விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து இன்று திண்டிவனத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. திண்டிவனம் புனித அன்னாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காலை 9:00 முதல் மாலை 3:00 வரை முகாம் நடக்கிறது. இதில், 120-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 15,000 காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இந்த முகாமில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ.,-டிப்ளமோ, டிகிரி, பி.டெக்.,- நர்சிங், எம்.பி.ஏ., போன்ற கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளலாம். இதற்காக,www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 226417 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பாலமுருகன் கூறியுள்ளார்.
Image
  2774 முதுகலை ஆசிரியர் பணியிடம்: தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அனுமதி தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரசு , நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகும். எனவே இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலன்கருதி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் ஐந்து மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும். அவ
  அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை; வகுப்பை புறக்கணித்த மாணவர்கள் ஊத்துக்கோட்டை : அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அவதிப்பட்ட மாணவர்கள், வகுப்பை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்எல்லாபுரம் ஒன்றியம், மாளந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இங்கு, 12 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆசிரியர்கள் மாறுதலுக்கான கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. இதில் மாளந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து எட்டு ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் மாறுதல் பெற்று சென்றனர். 10 நாட்களாக, நான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று மாணவர்களின் வகுப்பறையை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாரதி, தாசில்தார் ரமேஷ் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர், மாணவர்களிடம் பேச்சு நடத்தினர்.அவர்கள், 'ஐந்து ஆசிரியர்கள் இந்த பள்ளிக்கு மாற்றலாகி வருகின்றனர். விரைவில் அவர்கள் பணியில் சேர்வர்' என கூறினர்.இதனால் சமாதானம் அடைந்த பெற்றோர