Posts

Showing posts from December 1, 2012

குரூப்-1 தேர்வு தள்ளிவைப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு சென்னை: துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஜனவரி, 27ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி . என் . பி . எஸ் . சி . செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு : துணை கலெக்டர் , டி . எஸ் . பி ., வணிக வரித்துறை உதவி கமிஷனர் , மாவட்ட பதிவாளர் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான குரூப் -1 முதல்நிலைத் தேர்வு , வரும் , 30 ம் தேதி நடக்கும் எனவும் , இதற்கு , 6 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் , ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது . தேர்வுக்கு விண்ணப்பிக்க , 24 ம் தேதி வரை , வாய்ப்பு வழங்கப்படுகிறது . இதனால் , முதல்நிலைத் தேர்வு , ஜனவரி , 27 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது . விண்ணப்பதாரர்கள் , இணையதளத்தில் பதிவு செய்த , இரு நாட்களுக்குள் , கட்டணங்களை செலுத்த வேண்டும் . இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார் . மொத்தமுள்ள 25 காலி பணியிடங்களுக்கு , ஏற்கனவே , 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . தற்போது , தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் , மேலும் , 30 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என , எதிர்பார்க்கப்படுகிறது

ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர். முதலில் 5800 என்று அறிவிக்கப்பட்டஇடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பின்பு 7500 என்று கூறப்பட்டது இது இறுதியாக எந்த தொகையை வந்து அடையும் என்பது இறுதி செய்யப்பட்ட காலிபணியிடங்களின் கணக்கெடுப்பிற்கு பிறகே தெரியவரும். இந்த நிலையில் TRB ஐ தொடர்பு கொண்டுவினவியவர்கள் கூறியதன் வாயிலாக இந்தமாதம் இறுதிக்குள் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போதுதான் காலிபணியிட விவரங்கள் திரட்டும் பணி நடைபெற்று வருவதால் ஒரு வாரம் காலதாமதமாகவே இந்த பணிகள்நடைபெறும் என்பது ஊகிக்க முடிகிறது. TET பற்றிய பலரும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்பாட்டங்களை நடத்திவரும் வேலையில் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும்பணியிடங்கள் அனைத்தும் சனவரி மாதத்தில் நிரப்பப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு முறையும் பணியிடங்களை நிரப்புவது சனவரி மாதத்தில் தான் நடைபெறுவதால் இந்த முறையும் சனவரி மாத்தில் பணியிடங்கள் நிரப்புதல் நடைபெறும் என்று கூறப்படுகிறது.