
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! அரசாணை வெளியீடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவின் அடிப்படையில், அரசு பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களின் பணி நியமனம் ம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தலைமைச் செயலா் நா.முருகானந்தம் பிறப்பித்த அரசாணையில் , தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 2010-ம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அந்த சட்டத்துக்கான 2020-ம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதி உடையவர்கள் ஆவர். இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள்,...