Posts

Showing posts from March 3, 2014
TRB PG வழக்குகள்சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நீதியரசர் எஸ். நாகமுத்து அவர்கள் முன்னிலையில்  விசாரணை க் காக பட்டியலிடப்பட்டிருந்தன..நேரமின்மை காரணமாக வழக்குகள் விசாரணை நிலையை எட்டவில்லை. எனவே அனைத்து வழக்குகளும் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
முதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு. இன்று காலை சுமார் 10.30 மணியளவில் 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு வாரியத்தின் முன் குவிந்தனர். அப்பொழுது முதுகலை ஆசிரியர் நியமனம் குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் திரு.ஆறுமுகம் அவர்கள் கூறும் போது சென்ற வெள்ளிக்கிழமையே பட்டியல் தயாராகிவிட்டது எனவும் ஆனால் COMMUNAL ROASTERல் சில தவறுகள் இருப்பதால் அவற்றை சரிசெய்து புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் டி.ஆர்.பி., முன் ஆர்ப்பாட்டம். இன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முன் சுமார் 150க்கும் மேற்பட்டஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குவிந்தனர். அவர்கள் 5% மதிப்பெண் தளர்த்தி வழங்கிய அரசாணையை இரத்து செய்ய கோரிக்கை வைத்தனர். காலை 10.30மணிக்கு அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது, ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை.இதையடுத்து உடனடியாக அவர்களை வெளியேற்ற 2வேன்கள் நிறைய போலீஸ் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள். அதேபோல் ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்தவர்களை முதலில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் 5% மதிப்பெண் தளர்வு அரசாணையை இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது டி.ஆர்.பி., சார்பில் அரசாணை இரத்து செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று கூறிவிட்டது. Thanks to www.kalvisaithi.com
முதுகலை ஆசிரியர்த் தேர்வு சார்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது. முதுகலை ஆசிரியர்த் தேர்வு தமிழ் சார்பாக 4வழக்குகளும் மற்ற பாடம் சார்பாக 4வழக்குகளும் நீதியர்சர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு வருகிறது. விசாரணை குறித்த நிலை விசாரணை முடிந்த பின் தெரியவரும்.