Posts

Showing posts from January 30, 2022
  பணிநிரந்தரம், முதல்வரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்: அரசு பள்ளிகளில் ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியத்தில் 12ஆயிரம் ஆசிரியர்கள் 10ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிபடி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தங்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். முதல்வர் பதவி ஏற்கும் முன்பே கடந்த ஆண்டு மே 3ம் தேதி அன்று சுகாதாரத்துறையில் 1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரம் செய்து விடியலை கொடுத்தார். தொடர்ந்து பட்ஜெட் மானிய கோரிக்கையில் கதர் கைத்தறி துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தோரை நிரந்தரம் செய்ய அறிவிக்கப்பட்டது. வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் நிரந்தரம் என்று அறிவிக்கப்பட்டத இந்து சமய அறநிலையத்துறையில் சிவாச்சாரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் நிரந்தரம் என அறிவிக்கப்பட்டது. அதுபோலவே, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி. செந்தில்குமார் கூறியதாவது: முதல்வர்
  அரசு இ-சேவை மையங்களில் இனி பள்ளிச் சான்றிதழ்களைப் பெறலாம்: அரசாணை வெளியீடு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட 23 வகையான சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனப் பள்ளிக்கல்வி துறைச் செயலா் காகா்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளாா். இது குறித்து அவா் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித்துறையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்பட அனைத்து வகையான ஆவணங்களும் அரசு பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலம் விண்ணப்பித்து விரைவாக பெற்றுக் கொள்ளுதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். இதற்கிடையே ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான கல்வி இணைச் சான்று, பிற மாநிலங்கள் மற்றும் திறந்தவெளி கல்வி மையங்களில் படித்ததற்கான கல்வி இணைச் சான்றுகள், தமிழ் வழியில் சான்று, உண்மைத் தன்மை சான்று, இடப்பெயா்வு சான்று, பள்ளி மாற்று சான்று, மதிப்பெண் சான்றிதழ், விளையாட்டு முன்னுரிமை சான்று மற்றும் சான்றிதழ்களில் திருத்தம் உ