Posts

Showing posts from July 23, 2022
Image
  TNPSC Group 4 Exam: மைனஸ் மார்க் அபாயம். தேர்வு அறையில் இந்த 3 முக்கிய விஷயங்களை மறக்காதீங்க! TNPSC group 4 exam minus mark to these mistakes details here: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வர்கள் பலருக்கும் தெரியாத விஷயம், இந்த தேர்வில் மைனஸ் மார்க் உண்டு என்பது . எது எதற்கெல்லாம் மதிப்பெண்கள் மைனஸ் செய்யப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளில் தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவதில்லை. ஆனால், தேர்வர்கள் கீழ்கண்ட தவறுகளைச் செய்தால் அவர்களுக்கு மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கிய பிரத்யேக விடைத்தாளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விபரங்களை சரிபார்த்த பின்பே பயன்படுத்த வேண்டும். தவறாக இருந்தால் பயன்படுத்தும் முன்பே மாற்றிக்கொள்ள வேண்டும். த
Image
  ஜேஇஇ நுழைவு தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கலாம்: நாடு முழுவதும் 25ம் தேதி தேர்வு நடக்கிறது ஜேஇஇ நுழைவுத் தேர்வு 25ம் தேதி நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ- மாணவியருக்கான ஹால்டிக்கெட்டுகளையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் முதுநிலை இயக்குநர்( தேர்வுகள்) டாக்டர். சாதனாபிராஷர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிளஸ் 2 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர் உயர் கல்விக்காக நடப்பு கல்வி ஆண்டுக்கான பகுதி-1 ஜே.இ.இ. முதன்மை நுழைவு தேர்வு-2022, கடந்த ‌ஜூன் மாதம் 24ம்தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு வருகிற 21ம்தேதி முதல் 31ம்தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த தேர்வு வருகிற 25ம் தேதி முதல் நடக்கும் என்று தேசிய தேர்வு முகமை தேதியை மாற்றி அறிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வு நாட்டில் 500 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 17 நகரங்களிலும் நடக்கும். 6 லட்சத்து 29 ஆயிரத்து 778 ேபர்இந்த 2ம் கட்ட நுழைவுத் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்த தேர்வு எழுதும் மாண
Image
  இன்னும் குரூப் 4 ஹால்டிக்கெட் டவுன்லோட் பண்ணவில்லையா?... தேர்வு எழுதுபவர்கள் கடைசி வரை காத்திருக்காமல் இப்பவே டவுன்லோட் செய்யுங்க...! டவுன்லோட் செஞ்ச ஹால்டிக்கெட்டை தேர்வு முடிஞ்சதும் தூக்கி வீசிடாதீங்க... அதான் தேர்வு எழுதிட்டோமே, அதற்கு அப்புறம் எதுக்கு ஹால்டிக்கெட்னு கேக்கிறீங்க..! அடுத்த கட்ட தேர்வுக்கு தெரிவு செய்யப்படும் நபர்களிடம், ஹால்டிக்கெட்டை தேர்வாணையம் கோரலாம் என்பதையும் தயவு செய்து மறக்காதீங்க. ட்வுன்லோட் ஈஸி www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்கு பர்ஸ்ட் போங்க. அப்புறம் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும். திரையில் தோன்றும் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அனுமதிச்சீட்டு தனியாக அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. ஆகையால், மேற்குறிப்பிட்ட முறையில் டவுன்லோட் செஞ்சு, பத்திரமாக வைச்சுக்கோங்க...! அவசியம் அனுமதி சீட்டில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதி சீட்டு இல்லாதவர்கள் தேர்வு கூடத்திற்குள் நுழைய கூட மு
Image
கலை மற்றும் அறிவியல் கல்லூரி. மாணவர் சேர்கை.! ஜூலை 27-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பு.! அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஜூலை 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். பொறியியல்‌ கல்லூரிகளில்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ சேர்க்கைக்காக விண்ணப்பித்தற்கான. கால அவகாசம்‌ 19.07.2022. என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ சேர்க்கைக்காக விண்ணப்பதற்கான கால அவகாசம்‌ 07.07.2022 என்றும்‌ அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்‌ வெளிவராத நிலையில்‌ அம்முடிவுகள்‌ வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்கள்‌ வரை அவர்களும்‌ விண்ணப்பிக்க கால அவகாசம்‌ வழங்கப்படும்‌ என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, மத்திய இடைநிலை கல்வி வாரிய தேர்வு (CBSE) பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள்‌ 22.07.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொறியியல்‌, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ சேர்க்கைக்கான விண்ணப்ப
Image
  மாணவர்கள் கவனத்திற்கு!! 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் அறிவிப்பு.. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த மாதம் ஜூன் 13 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் ஜூன் 20 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கும் ஜூன் 27 ஆம் தேதி 11 ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் திறக்கப்பட்டன. கொரோனா பரவல் ஒருபுறம் இருந்தாலும், மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்று பாடங்களை படித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பருவத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. . அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பருவத்தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Image
  7,301 இடங்களுக்கு நாளை குரூப்-4 தேர்வு: 22 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி தமிழக அரசு துறைகளில், 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு நாளை, 7,689 மையங்களில் நடக்கிறது. தேர்வில் பங்கேற்க 22 லட்சம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர் தேர்வு வாரியமான டி.என்.பி.எஸ்.சி., நாளை நடத்தும் தேர்வின் வழியே, கிராம நிர்வாக அலுவலர் 274; இளநிலை உதவியாளர் 3,593, தட்டச்சர் 2,108; சுருக்கெழுத்தர் 1,024 உள்ளிட்ட, 7301 இடங்கள், இந்த தேர்வின் வழியே நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு மாநிலம் முழுதும், 7,689 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு, 12.67 லட்சம் பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர், 6,635 முன்னாள் ராணுவ வீரர்கள் உள்பட, 22 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளனர். சென்னையில், 503 மையங்களில், 1.56 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். மதிப்பெண் முறை? தேர்வில், 10ம் வகுப்பு தரத்தில் மொத்தம், 300 மதிப்பெண்களுக்கு வினா தொகுப்பு புத்தகம் வழங்கப்படும். அதில், கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெறும்.