Posts

Showing posts from August 1, 2022
Image
  பள்ளிகளில் ஆசிரியரை நியமிக்க புதிய முறை! தமிழ்நாட்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் பி.எட் மற்றும் எம்.எட் படிக்கும் மாணவர்களுக்கான 80 நாட்கள் பயிற்சியின்போது ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பணிபுரிய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் மாணவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி அளிக்கப்படுகிறது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பிஎட் பட்டப்படிப்பும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடம் நடத்துவதற்கு எம்எட் பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும். பி.எட் மற்றும் எம்எட், பிஎச்டி பட்டப்படிப்புகள் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. ஆசிரியர் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட நாட்கள் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்பது விதிமுறையாக உள்
Image
குரூப் 4 தேர்வு மையம் செய்த குளறுபடி, பல ஆண்டு காலமாக காத்திருந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறி? தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்ப TNPSC Group 4 தேர்வு நடத்தப்பட்டது. கடைசியாக கடந்த 2019 ம் ஆண்டு தான் குருப் 4 தேர்வு நடைப்பெற்றது. 3 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வு நடைபெற்றதால் அதிகப்படியானோர் விண்ணப்பித்தனர். கடந்த 2019 ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஐந்து லட்சம் நபர்கள் பேர் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர். வி.ஏ.ஒ, இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத 22லட்சம் நபர்கள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் ஜூலை24 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் குருப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை அடுத்த பூந்தமல்லி - ஆவடி பிரதான சாலையில் அமைந்து உள்ள SUDHARSANAM VIDYAASHRAM (CBSE) SCHOOL பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்வு மையத்தில் நடத்த குளறுபடிகள் குறித்துதான் நாம் இங்கு விரிவாக பார்க்க போகிறோம். இது குறித்து தேர்வு எழுதிய ஒருவர்
Image
  திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை! தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 4ம் தேதி 1 லட்சம் ஆசிரியர் ஆர்ப்பாட்டம் ! தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாக அரசியல் வாக்குறுதி தருவது சகஜமான விஷயம் தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்வது உட்பட பல வாக்குறுதிகளை தந்து, ஆட்சியைப் பிடித்தது திமுக. தற்போது, மு.க.ஸ்டாலின் முதல்வரானதும், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆகஸ்ட் 4ம் தேதி, தமிழகம் முழுவதும் 1 லட்சம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைப்பெற்ற தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயலாளர், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பலவித சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான உத்தரவாதத்தை கூட சட்டமன்றத்தில் கூறவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட
Image
  இன்று வெளியாகிறது கல்லூரி மாணவர் தரவரிசைப் பட்டியல்!! கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 2022- 23ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 4.07 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதலாக 70 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது. மூன்று வகையான தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் வெளியிடும். பி.ஏ தமிழ் இலக்கியம்/ பி.லிட் போன்ற படிப்புகளுக்கான தமிழ் தரவரிசைப் பட்டியல், 12ஆம் வகுப்பில் பெற்ற தமிழ் மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும். அதேபோன்று, பி.ஏ. ஆங்கில இலக்கிய சேர்க்கைக்கான ஆங்கில தரவரிசைப் பட்டியல், 12ஆம் வகுப்பில் ஆங்கில பாடநெறியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படும். B.A. / B.Sc. / B.Com. / B.B.A. / B.C.A. / B.S.W போன்ற இதர அனைத்து பாடங்களுக்கான பொது தர