Posts

Showing posts from July 1, 2022
Image
  அரசுப் பள்ளிகளில் 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்-அமைச்சர் அன்பில் மகேஸ் அரசுப் பள்ளிகளில் புதிதாக 9 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பசுமைவழிச் சாலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 350 மாணவர்களுக்கு தலா ரூ.3,000 கல்வி ஊக்கத்தொகை மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகளையும் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது: இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் என்றால் அது நம் முதலமைச்சர் ஸ்டாலின் தான். கல்விக்கு ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள், உயர்கல்வியைத் தொடருகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டியது ஓர் அரசின் கடமை. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த உடன், கல்விக்காக சில திட்டங்களை கொண்டுவருவது
Image
  நவோதயா பள்ளியில் 1,616 காலிப் பணியிடங்கள்.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு.. நவோதயா வித்யாலயா பள்ளிகளில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1,616 பணியிடங்கள்: மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் பணிபுரிவதற்காக, பல்வேறு பிரிவுகளில் ஆசிரியர்கள் பயிற்சியளிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், பயிற்சியளிக்கப்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு, நூலகர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி மொத்தமாக 1616 பணியிடங்கள் நவோதய வித்யாலயா சமிதி ஆள்சேர்ப்பு 2022 மூலமாக நிரப்பப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்றும், இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் நாளை ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக கணினி அடிப்படையிலான தேர்வுகளை நவோதய வித்யாலயா சமிதி நடத்தும். ஆனால், தலைமை ஆசிரியர் பொறுப்புகளுக்க
Image
  தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்காலத் தடை தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள காலியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக 13,331 ஆசிரியா் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து இதில் சில முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையில், நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஆசிரியர்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும் முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது என்றும் கூறியுள்ளது. மேலும், அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கும்பட்சத்தில்
Image
  பள்ளி கல்வி வளாகத்தில் பாடை கட்டி ஒப்பாரி தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து, பள்ளிக்கல்வி துறை கமிஷனரக வளாகத்தில் பட்டதாரிகள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். தமிழக அரசு பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை உருவாக்காமல் தற்காலிகமாக 13 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிகளுக்கு கமிஷனரகம் உத்தரவிட்டது. இதற்கு எந்த வழிமுறையும் அறிவிக்கப்படவில்லை. மேலும் அரசியல்வாதிகள் உறுப்பினராக உள்ள பள்ளி மேலாண்மை குழு வழியே ஆசிரியர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த குளறுபடியான அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள், நேற்று மூன்றாம் நாளாக சென்னையில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது பட்டதாரிகள் தங்களுக்கு படித்த படிப்புக்கும் எழுதிய தகுதி தேர்வுக்கும் வேலை கிடைக்காமல் உள்ளதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், குற்றம் சாட்டினர். இதை அரசுக்கு எடுத்துக்காட்டும் வகையில் பிணம் போல் படுத்தும், பாடை கட்டியும், ஒப்பாரி வைத
Image
  வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை மாணவா் சோக்கை நடைமுறை தொடக்கம் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல், இளம் தொழில்நுட்ப பாடப் பிரிவுகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோக்கைக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் தொடக்க நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், துணைவேந்தா் கீதாலட்சுமி பங்கேற்று இணையதளத்தைத் தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 12 இளம் அறிவியல் மேதமை (பி.எஸ்சி. ஹானா்ஸ்), இளம் அறிவியல் தொழில்நுட்பம் (பி.டெக்) படிப்புகளுக்கு 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோக்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன. பிளஸ் 2 முடித்த, தகுதியான மாணவா்கள் இந்த இணையதளத்தின் மூலம் ஜூலை 27ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் விண்ணப்பிக்கல
Image
  11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு... இன்று(ஜூலை 1) முதல்.. வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!! தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன அதன் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதி பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று (ஜூலை 1ஆம் தேதி) முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் துணை தேர்வுக்கு ஜூன் 29ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விடைத்தாள் நகல் பெறுவதற்கு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  பள்ளிகளில் முக கவசம் கட்டாயம் : பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் மாணவர்கள் முக கவசம் கட்டாயம் அணியவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.nsimg3065597nsimg இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு