Posts

Showing posts from August 15, 2013
குரூப் 4 தேர்வுக்கான ரசீதின்நகலை அனுப்ப கடைசி நாள் ஆகஸ்ட் 19 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4க்கான தேர்வறை அனுமதிச் சீட்டு கிடைக்காத விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@ gmail.com என்ற மின்னஞ்சல்முகவரிக்கு 19-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பெயர், பதிவு எண், விண்ணப்பம் மற்றும் தேர்வுக்கட்டணம், கட்டணம் செலுத்தியஇடம், வங்கிக் கிளை அல்லது அஞ்சலக முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.