Posts

Showing posts from October 16, 2022
Image
  தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும்: ராமதாஸ் ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒடிசாவை போன்று தமிழகத்திலும் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலத்தின் அரசுத் துறைகளில் ஒப்பந்த பணி முறை ஒழிக்கப்பட்டிருக்கிறது; தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வந்த 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை நிரந்தர பணியாளர்களாக பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ளனர். ஒடிசா மாநில அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆகும். இதன்மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் கடைபிடிப்பதற்கான முன்னுதாரணத்தை ஒடிசா உருவாக்கியுள்ளது. ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் ஒடிசா மாநில அரசுத் துறைகளில் 2013-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கால கட்டங்களில் த
Image
  போட்டித்தேர்வுகளில் கணிதத்தில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? இன்று TNPSC தேர்விற்கு தங்களை தயார் செய்து கொண்டு இருக்கும் பெரும்பாலான சகோதர-சகோதரிகளின் பிரச்சினை கணக்கு பாடமே. நன்றாக படிப்பார்கள், நல்ல ஞாபக சக்தி இருக்கும், ஆனால் கணக்கு என்றால் பின் வாங்குவார்கள். அவர்கள் கணக்கில் இருந்து கேட்கப்படும் அந்த 25 கேள்விகளை மிகப் பெரிய தலைவலியாக உணர்வார்கள். போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று வேலை வாங்க வேண்டுமெனில் இந்த 25 கேள்விகளில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்கு சரியான விடை அளிக்க வேண்டும். அதற்கு குறைந்தால் உங்கள் வெற்றி வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கும். 25 க்கு 24 எடுத்தால் உத்தமம் 25 க்கு 20 எடுத்தால் மத்திமம் 25 க்கு 15 எடுத்தால் மோசம் 25 க்கு 10 எடுத்தால் நாசம் பெரும்பாலும், இரண்டு அல்லது மூன்று வினாக்கள் குறைபாட்டினால் வேலையைத் தவற விட்டவர்கள் கணக்கில் 15 முதல் 18 கேள்விகளுக்கே சரியான விடை அளித்து இருப்பார்கள். இந்த கணக்கினைக் கையாளுவது எப்படி? ● முதலில் நீங்கள் ஒன்றினை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், போட்டி தேர்வுக்குப் படிப்பவர்களில் அனைத்து பாடப் பகுதிகளிலும் வல்லுநர் எ
Image
  சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.4.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.13.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான, ஆண்டு கட்டணம் ரூ.23.5 லட்சத்தில் இருந்து ரூ.24.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தினமலர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஏற்பாடு தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ள 2 ம் நிலை காவலர் தேர்வுக்கு, தினமலர் நாளிதழும் நேஷனல் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து மதுரையில் 50 பேருக்கு 40 நாட்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளது. பயிற்சியில் பங்கேற்க நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தி 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்கள் பதிவு எண்கள்: 8401, 8467, 8544, 8705, 8801  8403, 8471, 8604, 8719, 8803 8405, 8480, 8617, 8724, 8842 8406, 8482, 8631, 8730, 8863 8409, 8486, 8646, 8748, 8867 8410, 8521, 8648, 8749, 8874 8422, 8532, 8656, 8753, 8877 8428, 8534, 8658, 8760, 8881 8435, 8535, 8666, 8781, 8883 8464, 8538, 8701, 8788, 8897 தேர்வானவர்களுக்கு அக்.19 முதல் பயிற்சி அளிக்கப்படும் என நேஷனல் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் தெரிவித்தார். தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ள 2 ம் நிலை காவலர் தேர்வுக்கு, தினமலர் நாளிதழும் நேஷனல் இன்ஸ்டிடியூட்டும் இணைந்து மதுரையில் 50 பேருக்கு 40 நாட்கள் இலவச பயிற்சி அளிக்க உள்ளது.