24 June 2014

அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ஜெகநாதன் என்பவர் பங்கேற்றார். ஆனால், அதில் அவர் தேர்வாகவில்லை.இந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்காக காலியாக உள்ள 25 இடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வர்கள் அழைக்கப்பட்டனர். இந்த தேர்வுப் பணியின்போது, அது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவில்லை.இதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளை நிரப்பும் முன்பு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை.எனவே, அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, வேலைவாய்ப்புச் சட்டம் 1959-ன் படி அரசுப் பணியில் எந்தத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அதை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறுவழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. அதனால், அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அவர் உத்தரவிட்டுள்ளார்.வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக்கூடாது. பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது தொடர்பாக அதிகமானோர் படிக்கும் பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.மேலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணிகளுக்கு மட்டும் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.எனவே, எதிர்காலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.தலைமைச் செயலர் இதர அனைத்து துறைச் செயலர்களுக்கும் இதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்? *பயிற்சிநிலையங்களில்மீதுவைக்கின்றநம்பிக்கையைமுதலில்உங்கள்மீதுவைக்கவேண்டும். *மனம்மற்றும்உடல்இரண்டையும்தேர்வுக்குத்தயாராக்கவேண்டும். *சுயசிந்தனையுடையவராய்உங்களைநீங்கள்நினைக்கவேண்டும். *தேர்வுக்குத்தயார்செய்வதற்குசெலவிடும்காலத்தையும்,வருவாய்இழப்பையும்வாழ்நாள்முதலீடாககருதவேண்டும். *தகுதித்தேர்வைவெறுக்காமல்வாழ்க்கையில்கிடைக்கபெற்றவரப்பிரசாதமாகவும்,உங்களின்திறமைக்குவிடப்பட்டசவாலாகவும்ஏற்றுக்கொள்ளவேண்டும். *தகுதித்தேர்வினைஆதரிக்காவிட்டாலும்அதைஎதிர்க்காதமனநிலையைப்பெற்றிருந்தால்அல்லதுஇனிபெறப்படுவீர்கள்என்றால்உங்கள்வெற்றிஉங்களால்உறுதிசெய்யப்படும். *முதலில்சந்தையில்கிடைக்கும்கண்டதைஎல்லாம்படிக்காமல்தேவையானதைமட்டும்தேர்வுசெய்துபடிக்கவேண்டும். * 6முதல்8ஆம்வகுப்புவரைபாடம்நடத்த9,10,11,12-ம்வகுப்புபாடங்களைஏன்படிக்கவேண்டும்என்றஎண்ணத்தைதூக்கிஎறியவேண்டும்.அதாவதுநம்முடையவாழ்க்கைமுழுவதும்சமூகத்தில்மரியாதையையும்,பிறபணிகளில்கிடைக்கும்சலுகைகள்மற்றும்இதரபயன்களையும்அளிக்கப்போகும்இந்ததகுதித்தேர்வின்வெற்றிக்கு6முதல்12-ம்வகுப்புவரையிலானபாடத்திட்டம்மிகவும்குறைவுஎன்றஎண்ணம்முதலில்வரவேண்டும். * 6முதல்12வகுப்புவரைஅனைத்துபாடங்களையும்வாசிக்கவேண்டும்.அதுவேதேர்வின்பயத்தினைபோக்கி,அதிகமதிப்பெண்ணைபெற்றுத்தரும். *தொடர்ந்துபடிப்பதும்சலிப்பைஉண்டுபண்ணும்.அதனால்,சின்னச்சின்னஇடைவெளிகளில்ஓய்வுஎடுத்துக்கொள்ளவேண்டும். *சைக்காலஜிக்கென்றுகண்டதையெல்லாம்வாங்கிபடிப்பதைவிடபேராசியர்.கி.நாகராஜன்அவர்களால்எழுதப்பட்டகல்விஉளவியல்புத்தகங்களைவாங்கிபடிக்கலாம். *தமிழ்,கணிதம்-அறிவியல்,சமூகஅறிவியல்,ஆங்கிலம்,உளவியல்என்றவரிசையில்ஒவ்வொருபாடமாகபடித்துமுடித்தபின்னர்அடுத்தபாடத்திற்குசெல்லவேண்டும்என்பதைநினைவில்நிறுத்திசெயல்படுங்கள். *எந்தவிதத்தடுமாற்றமோ,பயமோஇல்லாமல்,மிகவும்இயல்பாகத்தேர்வுகளைச்சந்தியுங்கள். *ஒருதேர்வுமுடிந்ததும்அதைப்பற்றியகவலைகளைவிட்டுவிட்டு,அடுத்தநிலைக்குதயாராகுங்கள் thanks to www.tntam.in
உதவி பேராசிரியர் பணிக்கு கூடுதல் தகுதி படிவம்: சமர்ப்பிக்க, டி.ஆர்.பி., அறிவுறுத்தல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், உதவி பேராசிரியர் பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள், கூடுதல் தகுதிகள் குறித்த படிவங்களை, ஜூலை 1 முதல், 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, ஆசிரியர்தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான, அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்தாண்டு நவ., 25 மற்றும் டிச., 6ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதுகுறித்த மதிப்பெண்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, இந்தாண்டு ஜன., 30 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், மீண்டும் ஒரு முறை, விடுபட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், அரசின் அறிவுறுத்தல்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களிடம் இருந்து, சில தகவல்களைப் பெற, டி.ஆர்.பி., முடிவெடுத்துள்ளது. இதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள், கல்வியியல்கல்லூரியில் பணியாற்றி, அனுபவம் பெற்றிருந்தால் படிவம் 1 ஐயும், 2009,ஏப்ரல், 3ம் தேதிக்கு முன், எம்.பில்., முடித்து, சரியான பணிச்சான்று பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பின் போது, அதற்கான 'தகுதி மதிப்பெண்' பெறாதவர்கள், படிவம் 2 ஐயும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவங்களை, தமிழ் மற்றும் ஆங்கிலத் துறையைச் சேர்ந்தவர்கள், ஜூலை, 1ம் தேதி; வணிகவியல் துறையினர், 2ம் தேதி; கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,வரலாறு மற்றும் பொருளியல் துறையினர், 3ம் தேதி; கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் பிற துறையினர், 4ம் தேதி, சென்னை, காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி., முடக்கம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது.இத்தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்டது. இதன் தலைவராக இருந்த நவநீதகிருஷ்ணன் ராஜ்சபா இடைத்தேர்லுக்கான அ.தி.மு.க., உறுப்பினராக போட்டியிடுவதால் அப்பதவியை ராஜினாமா செய்தார். தலைவர் பதவி காலியாகி 9 நாட்கள் ஆகிறது. புதிய தலைவர் நியமிக்கப்படாததால் தேர்வு முடிவு அறிவிப்பு, புதிய பணியிடங்களுக்கான அறிவிப்புகள் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதே போல தேர்வாணையத்தில் 7 உறுப்பினர் பதவிகளும் காலியாக உள்ளன. தேர்வாணை முடக்கம் பல இளைஞர்களின் வேலை வாய்ப்பையும் முடக்கியுள்ளது.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...