Posts

Showing posts from July 7, 2022
Image
  தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்: பள்ளிக் கல்வித்துறை தகவல் தமிழ்நாட்டில் 2022-2023ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு மொத்தம் 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒரு நபரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்ததால் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் வேலை பெற, மற்றொரு போட்டித்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. வரும் டிசம்பரில் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டித் தேர்வு நடைபெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசாணை எண் 149-ஐ நீக்க ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அரசாணை எண் 149 வெளியாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக இந்தாண்டு தேர்வு நடக்கிறது.
Image
  TET ஆன்லைன் தேர்வுக்கு TRB இணையதளத்தில் பயிற்சி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.  மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால் அவகாசம் வழங்கப்பட்டது. அதில் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.  மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்
Image
  அரசின் போட்டித் தேர்வுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பயிற்சி..! அரசின் கல்வி தொலைக்காட்சியில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படுவதாகமாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில மற்றும் ஒன்றிய அரசு நடத்தும் போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (UPSC) தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC),இரயில்வே தேர்வாணையம் (RRB) , பணியாளர் தேர்வு குழுமம் (SSC) ,வங்கிப் பணியாளர் சேவைகள்குழுமம்(IBPS) உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தயாராகும் மாணவஃமாணவிகள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டையில் நேரடியாக நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாதவர்கள், தனியார் நிறுவனங்களில்பணிபுரிந்து கொண்டு அரசுப்பணிக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் கல்வி த