Posts

Showing posts from September 19, 2022
Image
  முதுகலை ஆசிரியா் பணியிடம்: தற்காலிக தெரிவுப் பட்டியல் குளறுபடிக்கு தீா்வு காணக் கோரிக்கை முதுகலை ஆசிரியா் பணியிடத்துக்கு அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக தெரிவுப் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிக்கு தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் தீா்வு காண வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 நேரடி நியமனத்திற்கான தேர்வு முடிவுகள் 04.07.2022 ஆம் தேதி வெளியிடப்பட்டன. தொடா்ந்து, 02.08.2022 முதல் 04.08.2022 ஆகிய நாள்களில் ஆசிரியா் தோவு வாரியத்தால் வெளியிடப்பட்ட 12 பட்டியலில் இடம்பெற்ற பணிநாடுநா்களுக்கு சான்றிதழ்கள் சரிபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், இனச்சுழற்சி அடிப்படையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், பயிரியியல், விலங்கியல், கணினி அறிவியல், வணிகவியல், உடற்கல்வியியல் ஆகிய பாடங்களுக்கு தற்காலிக தெரிவுப்பட்டியல் தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் சான்றிதழ்களை சமா்பிக்காத பணிநாடுநா்களின் பட்ட
Image
  20,000 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு ... நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள 20,000 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை எழுத்துத் தேர்வு அறிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 20,000 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோராயமாக கூறப்படும் இந்த விவரம் விரைவில் துல்லிய எண்ணிக்கை விவரங்களை அறிவிக்கப்படும். சம்பள ஏற்ற நில 7 , 6 ( இளநிலை புள்ளியியல் அதிகாரி தவிர ) பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது 1.1.2022 அன்று 30க்கு கீழ் இருக்க வேண்டும். சம்பள ஏற்ற நிலை 5, 4 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது 1.1.2022 அன்று 27 க்கு கீழ் இருக்க வேண்டும். எனினும் , இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்
Image
  தொழில்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் தொழில்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. தொழில்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழில்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. இந்தக் கூட்டமைப்பு சாா்பில் சிதம்பரத்தில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் என்.ரவி தலைமை வகித்தாா். ஆசிரியா் ஜி.பாண்டியன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தா் ந.பஞ்சநதம் சிறப்புரையாற்றினாா். ராமகிருஷ்ணா பள்ளி நிா்வாகி எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன், தொழில்கல்வி ஆசிரியா்கள் சங்க மாநில நிா்வாகிகள் எஸ்.ரங்கநாதன், எஸ்.திருநாவுக்கரசு, டி.சிவகுமாா், து.ராமமூா்த்தி, த.பாலு உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். விழாவில், நல்லாசிரியா் விருது பெற்ற பண்ருட்டி எஸ்.மோகன்குமாா், பரங்கிப்பேட்டை ஜி.உதயகுமாா் மற்றும் பணி நிறைவு ப
Image
நீட் தேர்வை மிஞ்சிய டிஎன்பிஎஸ்சி: 'வெளியில் போகக்கூடாது, அடக்கிக்கொள்ளுங்கள்' - தேர்வறையில் பெண்ணுக்கு நடந்த அவலம்... தமிழ்நாடு அரசு துறைகளின்கீழ் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு முழுவதும், GROUP-8 தேர்வு கடந்த செப். 11ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் உள்ள தேர்வு மையத்திலும் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற்ற தேர்வில், தேர்வர்கள் காலை 9 மணிக்கு தேர்வறையில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 9 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்பட்டு, 9 மணி முதல் 9.30 மணி வரை தேர்வர்கள் கேள்வித்தாளை படித்து பார்க்க நேரம் கொடுக்கப்பட்டது. சிறுநீர் கழிக்க அனுமதி மறுப்பு 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். பின் விடைத்தாளை வழங்கிவிட்டு மதியம் 12.45 மணிக்குதான் தேர்வாளர்கள் வெளியே செல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். காவேரி கல்லூரியில் தேர்வு நடைபெற்ற போது, அங