Posts

Showing posts from August 16, 2023
Image
  10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு நடைபெற்ற ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. IMG_20230816_184550 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். தமிழக பள்ளிக்கல்வியில் நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.3-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதேபோல, மார்ச் 14-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வும் ஏப்.5ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ஏப்.6ம் தேதி தொடங்கி ஏப்
Image
  நாடு முழுவதும் சுமார் 10லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலி! நாடாளுமன்ற நிலைக்குழு தகவல். நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் ( 9,86,585) ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அதை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்தியஅரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு தகவல் அறிவுறுத்தி உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி தொடங்கி ஆகஸ்டு கடந்த 11 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தொடரின்போது, மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, நாடாளுமன்ற இரு அவைகளையும் முடக்கிய எதிர்க்கட்சிகள், மத்திய பாஜக அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மோடி பதில் அளித்தபோது, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறின. இந்த கூட்டத்தொடரில், கல்வி, மகளிர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைகள் தொடர்பாக, பாஜக எம்.பி.யான விவேக் தாக்கூர் தலைமையிலான நிலைக்குழு ஒரு முக்கியமான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அதில், 2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 62,72,380. இவற்றில் 9,86,585 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியா
Image
  TET - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 21.08.2023 முதல் தொடக்கம் - செய்தி அறிக்கை வெளியீடு. தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அமையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன . தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ( TRB ) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு 2023 டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது . மேலும் இத்தேர்வு தொடர்பான விவரங்கள் அறிந்து கொள்ள Glamotron http://www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து சென்னை , கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான கட்டணமில்லா நேரடி ( Offline ) பயிற்சி வகுப்புகள் 21.08.2023 அன்று தொடங்கப்படவுள்ளது . இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன . இவ்வலுவலகத்தால் நடத்தப்படவுள்ள TET Paper -1 மற்றும் Paper - II