Posts

Showing posts from December 5, 2014
தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ள 42 நடுநிலை பள்ளிகள் பட்டியல் !! 42 தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது .அரசாணை எண் -201-02.12.2014
128 புதிய தொடக்க பள்ளிகள் துவங்க அரசாணை வெளியீடு !!! அரசாணை 200- நாள் 02.12.2014 படி 128 துவக்க பள்ளிகள் தொடங்க உத்தரவு !!
BRTE NEWS :885 ஆசிரியர் பயிற்றுனர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.  அன்பார்ந்த ஆசிரியர் பயிற்றுநர் நண்பர்களுக்கு வணக்கம். வெற்றி வெற்றி அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் .தலைமை இடம் மதுரை,கிளை விழுப்புரம் மகத்தான இனிய வெற்றி.  மதுரை உயர்நீதிமன்றத்தில் நமது மாநில பொதுச் செயளாலர் திருவாளர் எம்.ராஜ்குமார் அவர்களால் தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று (4.12.2014)தீர்ப்பு அளிக்கப்பட்டது.885 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக 15 நாட்களுக்குள் பள்ளிக் கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியிடைமாற்றம் செய்ய வேண்டும் என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.  மேலும் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டார வள மையத்தில் பணிபுரிந்து 31-10-2014 அன்றுடன் ஓய்வு பெறுவதால் திருவாளர் வி.முனியன் அவர்கள் பணிநீட்டிப்பு கேட்டும் வழங்காமல் மறுத்ததற்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து 27.11.14 அன்று மீண்டும் அதே பணியில் தொடர தீர்ப்பு கிடைத்துள்ளது.  இதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் மற்றும் விழுப்புரம் கிளையின் தளபதிகளான ஹரிக்கிர
PGTRB : பிழையின்றி வினாக்களை தயாரிக்க வலியுறுத்தல்  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுவாரியம் 1807 முதுகலை பட்டதாரிகளைதேர்ந்தெடுப்பதற்காக அறிவிப்பு வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்கள் சமர்பிக்கும் காலக்கெடு முடிந்துள்ளது. 2015 ஜன.,10 ல் சுமார் 2 லட்சம் முதுகலை பட்டதாரிகள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பல்வேறு பாடநிலைகளை கொண்டுள்ளதாகும்,  கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்வில் ஏராளமான பிழைகளுடன் வினாக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. குழப்பங்களை தவிர்க்க ஆசிரியர் தேர்வு வாரியம் வினாக்களை பிழை இன்றி தயாரிக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.