Posts

Showing posts from April 14, 2023
Image
  TANCET: முதுகலை பொறியியல் படிப்புகளான தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.! முதுகலை பொறியியல் படிப்புகளான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான சீட்டா மற்றும் எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுவிற்கு (TANCET 2023) பிப்ரவரி 28-ம் தேதி வரையில் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.  நுழைவுத் தேர்வினை மார்ச் 25-ம் தேதி எழுதிய 36, 403 மாணவர்களுக்கான முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.  மேலும் தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் பட்டியலை வரும் 20-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் பெயர், முதல் எழுத்து, பிறந்த தேதி, பாலினம், சாதி மற்றும் இருப்பிடம் போன்றவற்றில் திருத்தம் இருந்தால், உரிய ஆதாரங்கள் உடன் உடனடியாக tancee
Image
  தமிழ்வழியில் படித்தவர்களுக்கு பணி ஆணை வழங்காதது ஏன்? மருத்துவர் இராமதாஸ் கடும் கண்டனம்! "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடப்பிரிவுகளுக்கான சிறப்பாசிரியர் பணிக்கு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் பணியமர்த்தல் ஆணை வழங்கப்படவில்லை. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும், எந்த காரணமும் இல்லாமல் பணி ஆணை வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது" என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கு 1325 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 26.07.2017-ஆம் நாள் வெளியிடப்பட்டு, 23.09.2017-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன.   அதனடிப்படையில் தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசியர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டும், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள் 2020-ஆம் ஆண்டும் நிரப்பப்பட்டன. 
Image
  10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் பெறுவது கடினம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணித தேர்வில் எளிமையான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தாலும் சில வினாக்கள் குழப்பம் ஏற்படுத்தியதால் சென்டம் பெறுவது கடினம் என மாணவர்கள் தெரிவித்தனர். தேனி மாவட்ட மாணவர்கள் கூறியதாவது: சென்டம் கடினம்மோனிகா, கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப்பள்ளி, தேனி: ஒரு மதிபெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. 5 மதிப்பெண் வினாக்களில் 14 கொடுக்கப்பட்டு 10 வினாக்களுக்கு விடையளிக்கவும், 42வது கட்டாய வினாவும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. அந்த வினாவும் கணங்கள் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டதால் எளிமையாக விடையளித்தேன். ஆனால், 37 வது வினாவில் சமன்பாடு பார்முலா கண்டறிய குழப்பம் ஏற்பட்டது. அல்ஜிப்ரா, இயற்கணிதம், எண்களும் தொன்மகோடுகளும், நிகழ்தகவு, முக்கோணவியல் உள்ளிட்ட படித்த பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால் 80 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவேன். குழப்பத்தை ஏற்படுத்திய வினா ஜி.ஸ்ரீநிதி, என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி, கூடலூர்: கேள்வித்தாள் மிக எளிமையாக இருந்தது. 5 மதிப்பெண் வினாவில் கேள்வி எண் 37ல் இன்டர்செப்ட் (intercept) பாயிண்ட