Posts

Showing posts from October 14, 2022
Image
  எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்... ரூ.5,000 ஊதியம்... தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப் பள்ளியுடன் இணைந்து செயல்பட்டு வரும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தன. திமுக ஆட்சி அமைந்த உடன் அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வந்த எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியர்கள் தொடக்கக்கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நடப்பு கல்வி ஆண்டில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டாம் என பள்ளி கல்வித்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது . இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியது. எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு கற்பித்த தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம்
Image
  டிஎன்பிஎஸ்சி புது காலியிடங்கள் அறிவிப்பு தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கு நவம்பர் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பணியிடங்கள் பற்றிய விவரங்கள் : பதவியின் பெயர் மீன்துறை சார் ஆய்வாளர் பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீட்டு எண் தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணி காலிப்பணியிட எண்ணிக்கை:24 சம்பள ஏற்ற முறை ரூ. 35,900 - ரூ. 1,13,500 மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கு முக்கியமான நாட்கள்: அறிவிக்கை நாள்: 13.10.2022 இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 11.11.2022 கணினி வழித்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:- தாள் -1 (200 வினாக்கள்) கீழ்கண்டவற்றுள் ஏதேனும் ஒன்று 1. மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவல் (பட்டயப்படிப்புத் தரம்) 2. விலங்கியியல் (பட்டயப்
Image
  தமிழக ரேஷன் கடை காலிப் பணியிடங்கள்  கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள் விழுப்புரம் – 244 பணியிடங்கள் விருதுநகர் – 164 பணியிடங்கள் புதுக்கோட்டை – 135 பணியிடங்கள் நாமக்கல் – 200 பணியிடங்கள் செங்கல்பட்டு – 178 பணியிடங்கள் ஈரோடு – 243 பணியிடங்கள் திருச்சி – 231 பணியிடங்கள் மதுரை – 164 பணியிடங்கள் ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள் திருவண்ணாமலை – 376 பணியிடங்கள் அரியலூர் – 75 பணியிடங்கள் தென்காசி – 83 பணியிடங்கள் திருநெல்வேலி – 98 பணியிடங்கள் சேலம் – 276 பணியிடங்கள் கரூர் – 90 பணியிடங்கள் தேனி – 85 பணியிடங்கள் சிவகங்கை – 103 பணியிடங்கள் தஞ்சாவூர் – 200 பணியிடங்கள் ராமநாதபுரம் – 114 பணியிடங்கள் பெரம்பலூர் – 58 பணியிடங்கள் கன்னியாகுமரி – 134 பணியிடங்கள் திருவாரூர் – 182 பணியிடங்கள் வேலூர் – 168 பணியிடங்கள் மயிலாடுதுறை – 150 பணியிடங்கள் திருப்பத்தூர் – 240 பணியிடங்கள் கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள் திருப்பூர் – 240 விண்ணப்பிக்க கடைசி தேதி 14-11-2022
Image
  டி.என்.பி.எஸ்.சி.,யின் 4 வகை தேர்வு முடிவுகள் அறிவிப்பு டி.என்.பி.எஸ்.சி.,யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட செய்திக் குறிப்பு: டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலும், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. *கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் பதவியில், எட்டு காலியிடங்களுக்கு இந்த ஆண்டு, ஏப்., 30ல் தேர்வு நடத்தப்பட்டது.  தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு, வரும் 31ம் தேதி நடக்கிறது * நகர் ஊரமைப்பு உதவி இயக்குனர் பணியில், 29 காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு மே மாதம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நவ., 11ல் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது *தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில் அடங்கிய, மாவட்
Image
ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று துவக்கம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிவதற்கான, 'டெட்' என்ற தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. முதல் தாள் தேர்வு, இன்று முதல் 20ம் தேதி வரை, கணினி வழியில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 2.30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு முதல் முறையாக கணினி வழியில் நடத்தப்படுகிறது. தினமும், 32 ஆயிரம் பேர் வீதம், 300க்கும் மேற்பட்ட மையங்களில் நடக்கிறது. இதற்காக, தனியார் பள்ளி, இன்ஜினியரிங், கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள கணினி வகுப்புகள், தேர்வு மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. காலை, பிற்பகல் என, இரண்டு பிரிவுகளாக தேர்வர்களுக்கு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முறைகேடு இன்றி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம், பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.