Posts

Showing posts from January 29, 2020
TNPSC குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள முறைகேடு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேர்வை ரத்து செய்து விடலாமா என தமிழக அரசு ஆலோசித்து வருகின்றது. குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , கீழக்கரை என முறைகேடு நடந்த 2 தேர்வு மையத்திற்கு சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இது வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் முறைகேடு தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? முறைகேடு எப்படி நட