27 October 2022

 பள்ளி கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் 3 மாதத்திற்குள் நிரப்பப்படும்... அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி!!



தமிழகத்தில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் 3 மாதத்திற்குள் படிப்படியாக நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள மாவனல்லா, கூடலூர் பகுதிகளில் உள்ள அரசு உண்டு உறை விட பள்ளி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீடீர் ஆய்வு மேற்கொண்டார். அதை தொடர்ந்து நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை பிரிக்ஸ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 


மிகவும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் பொது பணித்துறை மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 1500 கோடி ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.


தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 3 மாதத்திற்குள் படிப்படியாக நிரப்பப்படும். தற்போது 3200 பேர்களுக்கு முதுநிலை ஆசிரியர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.


 மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பினால் அனுபவம் வாய்ந்த முதுநிலை ஆசிரியர்கள் பாதிக்கும் சூழ்நிலை உள்ளது என்பதை உயர் நீதிமன்றத்திற்கு தமிழக அரசு சார்பில் விரிவான பிரமாண பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார்.

 PGTRB பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்



PGTRB பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 22 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களின் எதிர்கால கல்வி நலனை கருத்தில் கொண்டு அடுத்து வரக்கூடிய தேர்விற்கு Syllabus மாற்றம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் 14.11.2022 ல் நடைபெற உள்ளது. 


இதில் பாடத்திட்டத்தை முற்றிலும் புதிய வடிவில் உருவாக்க திட்டமிடபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதிகப்படியான அலகுகளின் எண்ணிக்கையை குறைப்பது குறித்தும்


பழைய கருத்துக்கள் நீக்கம் செய்யப்பட்டு  நடைமுறையில் உள்ள புதிய கருத்துக்களை இணைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

 டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு.. எப்போது ..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே




நிறுவனம்: மீன்வளத்துறை


காலி பணியிடங்கள்: 88


பணியின் பெயர்: ஆய்வாளர், துணை ஆய்வாளர்


பணியின் விவரம்: 


ஆய்வாளர் - 64


துணை ஆய்வாளர் - 24


விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 


இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: 


www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர பதிவுக்கட்டணம் ரூ.150 ஆக செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.100 ஆக செலுத்த வேண்டும்.


வயது வரம்பு: 


விண்ணப்பதாரர்களுக்கு வயது 32க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.


கல்வித் தகுதி: 


ஆய்வாளர்: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மீன்வள அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விலங்கியல், உயிரியல், கடலோர மீன்வளர்ப்பு, கடலியல் பிரிவில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.


துணை ஆய்வாளர்: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் மீன்வள அறிவியல், விலங்கியல் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது மீன்வள தொழில்நுட்ப பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


இப்பணிக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 நவ 12, 13ம் தேதிகளில் தட்டச்சுத்தேர்வு - தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம் அறிவிப்பு..



நவம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.


தட்டச்சு தேர்வு நடத்துவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை முதலில் விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பழைய முறைப்படி தட்டச்சு தேர்வு நடத்த உத்தரவிட்டார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து திருச்சியை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.



அப்போது ஏற்கனவே 2021-ல் புதிய முறைப்படி நடத்தப்பட்ட தட்டச்சு தேர்வில் 85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், புதிய முறைப்படி தட்டச்சு தேர்வினை வருகிற நவம்பர் 13-ந் தேதிக்குள் நடத்த வேண்டும் என அரசு தொழில்நுட்ப கல்வித்துறை இயக்ககத்திற்கு உத்தரவிட்டிருந்தார். 


மேலும் இதுதொடர்பான அறிக்கையை நவம்பர் 14-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தனர். இந்நிலையில் அரசு தொழில்நுட்பத்துறை கல்வி இயக்ககம், புதிய முறைப்படி தட்டச்சு தேர்வு நவம்பர் 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. அதன்படி விரைவாக தட்டச்சு செய்யும் முதல் தாள் இரண்டாவதாகவும், அறிக்கை தட்டச்சு செய்யும் இரண்டாவது தாள் முதலாவதாகவும் நடத்தப்பட உள்ளது.

 ஜெ. பழி வாங்கினார் முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றுவாரா??? 



டெட் கட்டாயம் என்று யார் அறிவித்தது NCTE தானே அதே NCTE clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் எழுத தேவை இல்லை என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்கள்.


இதை மட்டும் எதற்கு அப்போதைய அதிமுக அரசு ஏற்று கொள்ள வில்லை.


NCTE டெட் வெற்றி பெற்றால் 7 ஆண்டுகள் வரை சான்றிதழ் செல்லும் என்று அறிவித்து அதை ஆயுட்காலமாக மாற்றும் போது அதிமுக அரசு ஏற்று கொண்டு உள்ளது.


ஆனால் NCTE cluase v மட்டும் ஏற்று கொள்ள மாட்டார்கள் ஏன்? எதற்கு?


கலைஞர் ஆட்சி சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்று அரசியல் பழி வாங்கும் நோக்கோடு செயல்பட்டது.


2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நிலுவையில் உள்ள காலி பணியிடம் நிரப்பும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. எங்களுக்கு 9176 காலி பணியிடம் நிலுவையில் உள்ளது அதை நிரப்ப வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தோம் அவர்கள் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள் அதனால் வேலை கொடுக்க முடியாது என்று கூறி உள்ளனர். NCTE clause v விதிப்படி எங்களுக்கு டெட் பொருந்தாது என்று கோரிக்கை வைத்தும் உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது என்று கூறி பழி வாங்கிவிட்டார்கள்.


அதிமுக அரசை எதிர்த்து 94 பேர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம் அமர்வு  நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று இறுதி தீர்ப்பு கொடுத்தனர். அந்த தீர்ப்பில் NCTE clause v விதிப்படி டெட் பொருந்தாது. பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று  உத்தரவு பிறப்பித்தனர்.


இந்த வரலாற்று மிக்க தீர்ப்பை கலைஞர் வரவேற்று பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அரசு மேல்முறையீடு செய்யும் முடிவை கை விட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


கலைஞர் சொன்னால் நாங்கள் வேலை போடணுமா என்று கூறி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது அரசு.


உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. NCTE clause v விதிப்படி டெட் தேர்வு எழுத தேவை இல்லை என்று உறுதி படுத்தியது. மேலும் 5 கேள்விகள் எழுப்பி மீண்டும் சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் 5 கேள்விகள் பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு சாதகமாக இருந்தால் வழக்கு தொடுத்த தேதியில் இருந்து ஊதியம் மற்றும் சீனியாரிட்டி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.


சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய போது அரசு சார்பில் நீதிபதி வேணுகோபால் தீர்ப்பு வழங்கியவர் அவர் விசாரிக்க கூடாது வேறு நீதிபதி மாற்ற வேண்டும் என்று வாதிட்டனர். நீதிபதி சிவஞானம் அவர்கள் அரசின் அழுத்தம் காரணமாக NCTE clause v, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம், உச்ச நீதிமன்றம் விசாரிக்க சொன்ன 5 கேள்விகள் எதையும் விசாரிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்து உள்ளனர்.


94 பேருக்கு வேலை கொடுத்தால் பரவா இல்லை ஊதியம் மற்றும் சீனியாரிட்டி கொடுக்க வேண்டும் இதை பின்பற்றி 11000 ஆசிரியர்களுக்கு கொடுக்க நேரிடும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதற்காக அதிமுக அரசு சூழ்ச்சி செய்து தள்ளுபடி செய்து விட்டனர்.


நீதிபதி சிவஞானம் அவர்க்கள் தவறான தீர்ப்பு கொடுத்து உள்ளார் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லலாம் என்று இருந்த பொது நிதி காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து இருந்தோம்.


வழக்கு கொண்டு வர நிதி இல்லை கால தாமதம் ஆகியது நிதி திரட்டி வழக்கு கொண்டு வரும் நேரத்தில் கொரோனா வந்து அனைவரின் வாழ்க்கை அழித்து விட்டது.


கொரோனா கட்டுக்குள் வந்ததும் வழக்கு கொண்டு வரும் நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. நமது அரசு வந்து உள்ளது கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுகவால் பாதிக்கபட்ட நமக்கு நிச்சயம் விடியல் பிறக்கும் என்று நாங்கள் வழக்கு கொண்டு வர நிறுத்தி வைத்து இருந்தோம்.


கல்வி அமைச்சர், திமுக MLA, கூட்டணி கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி MLA கோரிக்கை மனு அளித்தோம்.


சட்டமன்றத்தில் திமுக MLA கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டும் என்று உரை ஆற்றினார்.


மனித நேய மக்கள் கட்சி MLA அப்துல் சமது வேலை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில்  உரை ஆற்றினார்.


கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, வீரமணி, பாலகிருஷ்ணன், முத்தரசன்,  காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கை மனு அளித்து கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


கல்வி அமைச்சர் அவர்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தோம் மேலிடம் சொல்லிவிட்டேன் அவர்கள் தான் அறிவிப்பார்கள் என்று கூறி இருந்தார்.


ஆனால் எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. மீண்டும் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து கொண்டு வந்து. இருந்தோம் மீண்டும் சட்டமன்றத்தில் திமுக MLA அண்ண துரை அவர்கள் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து நியமனம் போக நிலுவையில் உள்ள காலி பணியிடத்திற்கு பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


ஆனால் இதுவரை அரசு எங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை.


எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கூறி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியும் அரசு.கண்டு கொள்ள வில்லை.


மக்கள் நல பணியாளர் போல தான் நாங்களும் பாதிக்கபட்டோம் அவர்களுக்கு வேலை கிடைத்து உள்ளது எங்களுக்கு வேலை அறிவிப்பு கூட வரவில்லை  நாங்கள்.மட்டும் என்ன பாவம் செய்தோம்.


அதிமுக அரசு பழி வாங்கும் எண்ணத்தில் தான் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு வேலை கொடுக்க வில்லை.


நாங்கள் கேட்பது 20 காலி பணியிடத்திற்கு 1:5 அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு அழைத்து முன்னுரிமை அடிப்படையில் முதலில் 20 பேருக்கு பணி நியமனம் செய்தனர். அடுத்து 50 காலி பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு மீதம் உள்ள 80 பேரில் முன்னுரிமை அடிப்படையில் 50 பேருக்கு பணி நியமனம் செய்தனர். 100 பேரில் 70 நபர்கள் வேலையில் சேர்ந்து பணயாற்றினார்கள். மீண்டும் அரசு 30 காலி பணியிடத்திற்கு அரசாணை வெளியிட்டு பணி நியமன வேலைகள் நடக்கும் போது தேர்தல் தேதி அறிவித்து உள்ளார்கள் அதனால் பணி நியமனம் நிறுத்தி வைக்கபட்டது. ஆட்சி மாறியது நாங்கள் 30.பேர் இருக்கிறோம் எங்களுக்கு அரசாணை உள்ளது வேலை கொடுங்கள் என்று கேட்ட போது உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது தேர்வு எழுதுங்கள் என்று கூறினார்கள் 100 பேர் அழைத்து 70 பேருக்கு வேலை கொடுத்து விட்டு மீதம் உள்ள 30 பேருக்கு வேலை இல்லை என்று கூறினால் எப்படி இருக்கும்????


எந்த NCTE டெட் கட்டாயம் என்று கூறியதோ அதே NCTE கூறிய clause v மட்டும் அதிமுக மற்றும் திமுக அரசு ஏற்று கொள்ளது ஏன்???


NCTE clause v, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம், நீதிமன்றம் உத்தரவு வைத்து எங்களுக்கு அதிமுக அரசும் திமுக அரசும் வேலை கொடுக்க.மறுக்க காரணம் என்ன????


கலைஞர் அவர்கள் அறிக்கை கொடுத்தும் திமுக அரசு செயல்படுத்தாமல் இருப்பதன் நோக்கம் என்ன????


கலைஞர் இந்நேரம் இருந்து இருந்தால் முதல் பணி நியமனம் எங்களுக்கு தான் கொடுத்து இருப்பார் ஆனால் முதல்வர் ஸ்டாலின் தயக்கம் காட்டுகிறார் ஏன்? எதற்கு?


நாங்கள் சும்மா வேலை கேட்க வில்லை நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் , NCTE clause v, நீதிமன்றம் உத்தரவு வைத்து தான் கேட்கிறோம்.


NCTE clause v கண்டால் அதிமுக அரசும் விடியல் அரசும் ஏற்று கொள்ள தயங்குகிறார்கள் ஏன்?????


2010 இல் 9176 காலி பணியிடத்திற்கு 11000 ஆசிரியர்கள் காத்து இருந்தார்கள் தற்போது 2022 நிலவரப்படி 1000 பட்டதாரி ஆசிரியர்கள் கூட இல்லை இந்த 1000 ஆசிரியர்களுக்கு.கருணை அடிப்படையில் வேலை கொடுக்க அரசு தயக்கம் காட்டுகிறது ஏன் என்று தெரியவில்லை???


விடியல் அரசு NCTE clause v, நிலுவையில் உள்ள 9176 காலி பணியிடம் , நீதிமன்ற தீர்ப்பு, கலைஞர் அறிக்கை பின்பற்றி வேலை கொடுப்பார்களா என்று தெரியவில்லை.


எல்லாம் விடியல் முதல்வர் கையில் உள்ளது அவரை தான் நாங்கள் கலைஞர் உருவத்தில் பார்க்கிறோம் வேலை கொடுப்பாரா? கொடுக்க மாட்டாரா?


ஜெ. பழி வாங்கினார் முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றுவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.


















  டெட் தேர்வு; விரைவில் மறுசீராய்வு மனு - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரத்தில் சட்ட ஆலோசனை பெற்று விரைவில் நீதிமன்றத்...