சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்குகள் NEWS UPDATE
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்றய (29.01.2014)விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் விவரம்
1.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS TET EXAMS
PAPER I- FILED AFTER 26.11.2013 - No of writs 20
2.WRIT PETITIONS CHALLENGING THE KEY ANSWERS
TET EXAMS PAPER II -FILED AFTER 26.11.2013 -no of writs (more than )-74.
3.CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL- number of writ 1
இவ்வழக்குகள் நீதியரசர் சுப்பையா முன் விசாரணைக்கு வந்தன.
இன்றய விசாராணக்கு பட்டியலிடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தும் 26.11.2013 ம் தேதிக்கு பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள். தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் என்பதால் இவ்வழக்குகள் அனைத்தையும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்வதாக நீதியரசர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CHALLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS TAMIL வழக்கிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர உரிய கால எல்லைக்குள் தாக்கல் செய்யப்பட்டு இன்னும் விசாரிக்கப்படாத TET EXAMS PAPER I,PAPER II வழக்குகள் நாளை 30.01.2014 விசாரணைக்கு வரக்கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாளைய வழக்குகள் குறித்த விரிவான செய்தி பின்னர் வெளியிடப்படும்
29 January 2014
பணி நிரந்தரம் செய்து பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ஆசிரியர்கள் கவலையின்றி இருந்தால் தான் மாணவர்களை இந்த நாட்டின் எதிர்காலத் தூண்களாக உருவாக்க முடியும். ஆனால்,தமிழக அரசின் தெளிவற்ற கொள்கைகளால் அனைத்துத் தகுதிகளையும் கொண்ட ஆசிரியர்கள் தினக்கூலி தொழிலாளர்களைவிட குறைந்த ஊதியம் பெற்று வாடிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி,ஓவியம்,கணினி,தையல் ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ்16,549பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
05.03.2012அன்று தமிழக அரசு பிறப்பித்த அறிவிக்கையின் அடிப்படையில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் நேர்காணல் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் என்ற முறையில் குறைந்தபட்சம் வாரத்திற்கு3அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது என்றாலும்,அனைத்து பணி நாட்களிலும் முழு நேரமும் இவர்கள் பணியாற்றுகின்றனர்.
ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் மற்ற பாடங்களை நடத்தும்படியும் பணிக்கப்படுகின்றனர்.
முழு நேர ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும் போதிலும்,இவர்களுக்கு மாதம் ரூ.5,000மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. இது தினக்கூலி தொழிலாளர்களுக்கு கிடைக்கும் ஊதியத்தைவிட மிகவும் குறைவாகும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மட்டுமே இவர்களுக்கு பணி வழங்கப்படுவதால் மே மாதத்திற்கு ஊதியம் கிடைப்பதில்லை. அதுமட்டுமின்றி,அரசு ஊழியர்களுக்குரிய எந்த சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
மேலும் பகுதி நேர சிறப்பாசிரியர்களில் பலர் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியமர்த்தப்பட்டிருப்பதால் அவர்கள் பெறும் ஊதியம் அவர்களின் உணவுக்கும்,தங்குமிடத்திற்கும் கூட போதுமானதாக இல்லை.
தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஓராண்டாக பல்வேறு போராட்டங்களை சிறப்பாசிரியர்கள் மேற்கொண்டுவரும் போதிலும்,அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. மாறாக முழுநேர சிறப்பாசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை கடந்த08.05.2013அன்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதன்படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நிலைப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளுடன்5200 – 20,200 +தர ஊதியம்2800என்ற விகிதத்தில் காலமுறை ஊதியம் வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதி நேர சிறப்பாசிரியர்களும்,இப்போது தேர்ந்தெடுக்கப்படும் முழு நேர சிறப்பாசிரியர்களும் ஒரே கல்வித் தகுதி கொண்டவர்கள்,ஒரே மாதிரியான முறையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பணி செய்பவர்கள்.
ஆனால்,ஒரு பிரிவினருக்கு மாதம்5000ரூபாயும்,இன்னொரு பிரிவினருக்கு மாதம் சுமார்20,000ரூபாயும் வழங்குவது சரியா?சமநீதியா?என்பதை அரசு சிந்திக்க வேண்டும்.
பகுதி நேர சிறப்பாசிரியர்களின் குடும்ப நலனையும்,வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்க வேண்டும். இவர்களில் தகுதியுடையவர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு,போட்டித் தேர்வு நடத்தி பட்டதாரி ஆசிரியர்களாகவோ அல்லது முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாகவோ நியமிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பை நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டி.இ.டி., சலுகை மதிப்பெண்தமிழக அரசு தீவிர ஆலோசனை-Dinamalar
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு,அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர்ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என,எச்சரித்து உள்ளார்.
இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து,டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில்,தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.
ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின்கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு,அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர்ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்;தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என,எச்சரித்து உள்ளார்.
இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து,டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில்,தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.
ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின்கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)
தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...