Posts

Showing posts from June 11, 2019
TET தேர்ச்சி பெறாவிட்டால் சம்பளம் இல்லை - அதிகாரிகள் எச்சரிக்கை இந்தியா முழுவதும் இலவச கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்த அதிக ஆசிரியர்கள் தேவைப்பட்டனர். அதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த 2011-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை (Teacher Eligibility Test) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு தொடங்கப்பட்டது முதல் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியமர்த்தப்படுகின்றனர். இரண்டு தாள்களைக் கொண்ட இந்தத் தேர்வை ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே எழுத முடியும். அதிலும் 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் முதல் தாளிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புபவர்கள் இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தொடங்கும்போதே அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அ
TET Paper II - விண்ணப்பித்தும் 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை! வேலை கிடைப்பதில் உறுதியற்ற தன்மை: டிஇடி 2ம் தாளை எழுத மறந்த 40 ஆயிரம் பேர்ஆசிரியர் தகுதித் தேர்வு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 40 ஆயிரம் பேர் தேர்வெழுத வரவில்லை.ஏராளமானோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், தேவையின் அடிப்படையிலேயே பணியிடங்கள்நிரப்பப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனால் பணி வாய்ப்பு கிடைக்கும் என்ற உறுதித் தன்மை குறைந்ததால், விண்ணப்பித்தவர்களில் பலர் தேர்வெழுதவராமல் போயினர்.இரண்டாம் தாள் தேர்வுக்கு 4,20,957 பேர் விண்ணப்பித்த நிலையில், 3,80,317 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற"டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை