Posts

Showing posts from October 5, 2019
2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள்: திருத்தப்பட்ட அறிவிக்கையை வெளியிட்டது டிஆா்பி தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிக்கையை ஆசிரியா் தோவு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான உதவிப் பேராசிரியா் பணியிடங்களும், 20 கிரேடு-1 கல்லூரி முதல்வா் பணியிடங்கள், 30 கிரேடு-2 கல்லூரி முதல்வா் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக இருந்து வருகின்றன. இந்த காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், தமிழ், ஆங்கிலம், கணிதம், பிபிஎம், உயிரி வேதியியல், பல்லுயிா் பெருக்கம், உயிரி தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல் என பல்வேறு துறைகளின் கீழ் உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை ஆசிரியா் தோவு வாரியம் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியிட்டது. முதுநிலைப் பட்டப் படிப்புடன், நெட், செட் தோவில் தோச்சி அல்லது பி.எச்டி முடித்த 57 வயதுக்கு உள்பட்
தொலை தூரத்தில் தேர்வு மையங்கள்.. தமிழக பெண்களுக்கு எட்டாக் கனியாகும் அரசு பணிகள்? தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளை எழுதுவதற்கு கூட பெண்கள் விண்ணப்பிக்கும் சூழ்நிலை உருவாக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் சீனியாரிட்டி படி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. காலப் போக்கில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் பணியிடம் என்கிற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. ஆசிரியர் தகுதி தேர்வு பணி நியமன ஆணை அப்படியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் காத்திருந்தும் பணி நியமன ஆணை கிடைக்காமல் மீண்டும் தேர்வு எழுதுகிற நிலைக்கு பல்லாயிரக்கணக்கான பேர் தள்ளப்படுகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வு பணி நியமன ஆணை அப்படியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 3 ஆண்டுகள் காத்திருந்தும் பணி நியமன ஆணை கிடைக்காமல் மீண்டும் தேர்வு எழுதுகிற நிலைக்கு பல்லாயிரக்கணக்கான பேர் தள்ளப்படுகின்றனர். வனக்காவலர் தேர்வு மீண்டும் தொலைதூரத்தில்... இதேபோல் தமிழக அரசின் வனத்துறையும் வனக்காவலர் பணியிடத்துக்கான தேர்வுகளை நடத்துகிறது. இதற்கான ஹால் டிக்க