Posts

Showing posts from May 8, 2023
Image
  NEET Exam 2023 Analysis: இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்; நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ரியாக்ஷன் நீட் தேர்வில் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாக இருந்தன; வேதியியல், இயற்பியல் கடினம்; மாணவர்கள் கருத்து நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு எப்படி இருந்தது என இப்போது பார்ப்போம். தேர்வில் உயிரியல் பாடங்களில் இருந்து கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டதாகவும், அதேநேரம் இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்வுக்கு வழங்கப்பட்ட நேரம் போதவில்லை என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு நீட் தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் தலா 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும், இதில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு
Image
  NEET Exam: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து நீட் தேர்வில் அதிக கேள்விகள்.. எவ்வளவு தெரியுமா? தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் இருந்து மட்டும் நீட் தேர்வில் 165 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. : நீட் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில், 165 கேள்விகள் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்று இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இயற்பியல் பாடத்திற்கான 50 கேள்விகளும் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.  இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று (மே. 7) நாடு முழுவதும் நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகள் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் இந்த நீட் தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் 31 நகரங்களில் நடைபெற்ற இந்த நீட் தேர்வை 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் எழுதினர். இந்தத் தேர்வினை எழுதுவதற்குப் பல்வேறு கெடுபிடிகள் இருந
Image
  12ம் வகுப்பு பொதுத்தேர்வு: தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு! பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து 5.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அவர்களுக்கான துணைத் தேர்வு தேதி குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.  12ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்கள் துணைத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி துணை தேர்வு நடைபெறும் என்றும் இது குறித்த முழு விவரங்களை பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக துணை தேர்வு எழுத விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Image
  TET - குவியும் வழக்குகள்! தாமதமாகும் நியமனங்கள்! கேள்விக்குறியாகும் மாணவர் எதிர்காலம்! RTE-2009 சட்டம் இடைநிலை & பட்டதாரி ஆசிரியர் நியமனங்களில் ஒன்றிய & மாநில அரசுகள் பயிற்சி முடித்தோரை நேரடியாக நியமிப்பதால் கற்பித்தலில் பின்னடைவு ஏற்படுவதாகக் கருதி அவர்களின் தகுதியைத் தேர்வு மூலம் சோதித்து அதன்பின் பணி நியமனம் செய்ய அறிவுறுத்தியது. தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு மிகவும் கட்டுக்கோப்பான & நம்பகத்தன்மைமிக்க வகையில்தான் 2 ஆண்டுகள் மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்பட்டு பட்டயச் சான்று வழங்கப்பட்டு வந்தது. இருந்தும் ஒன்றிய அரசின் சட்டத்தை ஏற்று தகுதித் தேர்வு நடத்த முன்வந்தது தமிழ்நாடு அரசு. இதில் மாற்றுக் கருத்துகளும் மறுப்புகளும் இருந்தாலும், இதை நடைமுறைப்படுத்தியதில் ஒரு Logic இருந்தது. ஆனால், பட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை RTE-2009ற்கு முன்பிருந்தே பதவி உயர்வின் வழியும், நேரடி நியமனங்கள் TRB தேர்வு மூலமும்தான் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில் தகுதித் தேர்வு என்ற ஒன்றைத் தனியே நடத்த வேண்டிய தேவையே எழவில்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனம் போட்டித் தேர
Image
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட  ஆசிரியர்களின் கோரிக்கை  கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள  காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின்  வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட  எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு  நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான்  2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆண்