Posts

Showing posts from June 16, 2022
Image
சென்னை அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 16%, ஆங்கிலவழியில் பயிலும் மாணவர்கள் 84% - ஆர்.டி.ஐ, தகவல் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் 61 விழுக்காடு என்றும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் 35 விழுக்காடு என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளின் வாயிலாக தெரிய வந்துள்ளது. நாசர் முகமது முகைதீன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மொத்தம் 29413 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 12,34,426 மாணவர்களும், 11,78,386 மாணவர்களும் படித்து வருகின்றனர். அதில் 14,73,153 மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியிலும், 8,45,348 மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியிலும் படித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 26 அரசுப் பள்ளிகளில் மொத்தம் 26, 330 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அதில், 9,527 மாணவர்களும், 16,803 மாணவர்களும் அடக்கம். இதில், 1891 மாணவர்கள் தமிழ்வழி கல்வியிலும், 7636 மாணவர்கள் ஆங்கிலவழி கல
Image
 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியீடு - தேர்வுத்துறை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.
Image
  கணினிவழியில் ஆசிரியர் தகுதி தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படும்: தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் ஆசிரியர் தகுதித் தேர்வை கணினி வழியில் இரு கட்டங்களாக நடத்த தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில்சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல்தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுவோர் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை. நோய்த்தொற்று குறைந்ததையடுத்து நடப்பாண்டு டெட் தேர்வு நடத்தப்படும் என்று டிஆர்பி அறிவித்தது. தொடர்ந்து, டெட் தேர்வுக்கான அறிவிப்பாணை கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டு, இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு தாள்களுக்கும் சேர்த்து மொத்தம் 6.33 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு டெட் தேர்வு இரு கட்டங்களாக
Image
  நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.21-22-ஆம் கல்வியாண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி கடந்த 1-ஆம் தேதி தொடங்கி 9-ஆம் தேதி நிறைவுபெற்றது.  அதனைத்தொடர்ந்து, திருத்திய மதிப்பெண்களைப் பட்டியலிட்டு, தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த பணிகள் முடிவடைந்து பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.