Posts

Showing posts from May 23, 2023
Image
  TN 10th,11th Supplementary Exam :  10,11ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19ஆம் தேதி வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9,14,320, மாணவிகளின் எண்ணிக்கை 4,55,017, மாணவர்களின் எண்ணிக்கை 4,59,303 ஆகும். 8,35,614 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 4,04,904, மாணவிகள் 4,30,710 பேர் ஆவர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் இன்று(மே 23) முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி முத
Image
 ' தமிழக அரசே..பகுதி நேரத்தை ஒழித்திடுக' பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்! பணி நிரந்தரம் கோரி, அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 'பணி நிரந்தரம்' வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தியும், திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் இன்று (மே 22) தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி, கம்ப்யூட்டர், தையல் இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்வியல் திறன் ஆகியப் பாடப்பிரிவுகளை கற்பிப்பதற்குப் பகுதி நேர ஆசிரியர்கள் 2011ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டனர். வாரத்தில் மூன்று அரை நாட்கள் பணி என்ற விதியின் அடிப்படையில் மாதம் ரூ.5000 தொகுப்பு ஊதியத்தில் முதலில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பல்வேறு காலகட்டங்களில்