முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் தமிழ் வழி படித்தவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு 7 மையங்களில் இன்று ஆரம்பம்.
முதுகலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தில் 7 மையங்களில் சான்றிதழ்சரி பார்ப்பு பணி இன்று (23ம் தேதி) ஆரம்பமாகிறது.தமிழகத்தில் 2011-12ம் கல்வி ஆண்டில் முதுகலை ஆசிரியர்மற்றும் உடற்கல்வி இயக்குனர் கிரேடு 1 நியமனத்திற்கான எழுத்துதேர்வு நடந்தது. இதற்கான விண்ணப்பத்தில் தமிழ் வழியில் பயின்றதற்கான முன்னுரிமை கோரியர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்தது.இதில் வரலாறு, பொருளியல், வணிகவியல் பாடங்களில் தமிழ் வழிக்கு ஒதுககப்பட்ட பணி இடத்தில் பெரும்பாலானவர்கள் உரிய சான்றிதழ்களைசமர்ப்பிக்கவில்லை. எனவே, மீதமுள்ள பணி நாடுநர்களில் வரையறுக்கப்பட்ட மார்க் பெற்றவர்கள் மட்டும் பாடவாரியாக சான்றிதழ் சரி பார்க்க தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த பணி நாடுனர்களின் விபரம் ஆசிரியர் தேர்வு வாரிய வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.இவர்களுக்கு நெல்லை, திருச்சி, மதுரை, கோவை, சேலம்,விழுப்புரம், சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் இன்றும் (23ம் தேதி), நாளையும் (24ம் தேதி) சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை வி.எம் சத்திரம் ரோஸ்+மேரி மெட்ரிக் பள்ளியில் இப்பணி நடக்கிறது.சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் ஈடுபடும் கல்வித் துறை அலுவலர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் உமா பயிற்சி அளித்தார். சான்றிதழ் சரி பார்க்க ஏற்கனவே தகுதியானவர்களுக்கு அழைப்பு கடிதமும் அனுப்பபட்டுள்ளது.
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம் செய்து வருகின்றனர். இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான அன்றே(ஏப்ரல் 25ம் தேதி) டிஎன்பிஎஸ்சியின் இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். இதனால், போட்டி போட்டு கொண்டு தேர்வர்கள் விண்ணப்பித்தனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் இளங்கலை, முதுகலை படித்தவர்கள் என்று போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இது வரை பல லட்சம் பேர் விண்ணப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தேர்வுக்கு மே 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை மே 29ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மே 31ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தங்களை செய்து கொள்ளலாம். ஜூலை 12ம் ...
Comments
Post a Comment